Business19 May 2013

பாதிப்படைந்த வர்த்தக நிலையங்கள் மீள புனரமைப்பு

 
யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் பாதிப்படைந்துள்ள வர்த்தக நிலையங்களை மீள புனரமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் முன்வந்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு அமைய பாதிப்படைந்த வர்த்தகர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஆயிரத்து 230 வர்த்தகர்களில் தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு முதல் கட்டமாக நிதியுதவி வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட பிரதிநிதி கே.எஸ்.ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை, கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர்  உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

இதற்காக 7 கோடி ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ராகவன் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes