General23 May 2013

இலங்கையர் உள்ளிட்டோர் கைது


பிரித்தானியாவில் சட்ட விரோதமான முறையில் குடியேறிய 18 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள் என்று ஏ.எப்.பி இணையத்தளம் தெரிவித்துள்ளது. 

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் காவற்துறையினர் இணைந்த யூரோபோலினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 11 பேர் பிரித்தானாயிhவிலும், 7 பேர் பிரான்ஸிலும் கைதாகியதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆசியநாடுகளில் இருந்து தங்களை பிரித்தானியாவுக்கு அழைத்து செல்வதற்காக, அவர்கள் ஆட்கடத்தல் காரர்களிடம் தலா 6500 டொலர்கள் வீதம் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களுடன் வந்த மேலும் சிலர், போலியான ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவுக்கும் சென்றிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes