
பாகிஸ்தான் அணியின் சிரேஸ்ட வீரர் யூனிஸ்கான் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைவராகவும் செயற்பட்ட இவர் இந்த வருட ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய சுற்றுலாவின் போது ஒழுங்கீனமான நடந்துகொண்டதாக தெரிவித்து, இவர் உட்பட மொஹமது யூசுப், சைட் அபட்ரிடி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
பின்னர், யூனிஸ்கான் தவிர ஏனையோர் அணியில் இணைத்துக் கொள்ளப் பட்டிருந்தனர்.
எனினும், யூனிஸ்கானுக்கும் பாகிஸ்தான் கிரிக்கொட் வாரியத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் தொடர்ந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான் கிரிக்கொட் சபையின் தலைவர் இஜாஸ் பட்டிற்கும் யூனுஸ்கானுக்கும் இடையில் நேற்று பேச்சுவார்தை ஒன்று இடம்பெற்றது.
இதனை அடுத்து ஏற்பட்ட சுமூக நிலையை அடுத்து அவர் உடன் ஒருநாள் அணியில் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளார்.