டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற பெருந்தோட்டப் பாடசாலைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள், பாடசாலைகளின் மீள்கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் இடமாற்றங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் நிலை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்டு மாற்றுப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட மாணவர்களின் கல்விச் சூழல் குறித்து துல்லியமான தரவுகள் அவசியம் என பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க, தமிழ் மொழி பேசும் ஆசிரியர்களைத் தனியாகப் பயிற்றுவித்து ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வெற்றிடங்களில் 50 சதவீதமானவை இந்த சுற்றில் நிரப்பப்படும்.
புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ஐந்து வருடங்கள் கடமையாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ஐந்து வருடங்கள் கடமையாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்களுக்குத் தடையற்ற 13 வருடக் கல்வியை வழங்குவதிலும், தமிழ் மொழி மூலமான தொழிற்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
Latest News
பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து பிரதமர் அதிரடி உத்தரவு!
Local
10 June 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
10 June 2026
இராணுவ வீரர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்த வேண்டாம்: அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச எச்சரிக்கை
Local
09 June 2026
சங்கீத்சனின் கைது அரச பயங்கரவாதம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் !
Local
09 June 2026
சிங்கப்பெண் அதிரடிப்படை அறிமுக நிகழ்வு: ஏ.ஐ. காணொளியில் எழுத்துப் பிழைகள் - புதிதாக எழுந்த விமர்சனம்
Local
09 June 2026
தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு
Local
09 June 2026
ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவது கட்டாயம்: புதிய விதிமுறை அறிமுகம்
Local
09 June 2026
காவல்துறை விசேட நடவடிக்கையில் 10 பேர் கைது: ஆபத்தான பொருட்கள் மீட்பு!
Local
09 June 2026
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
Local
09 June 2026
லங்கா சதொச ஊடாக 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்
Local
09 June 2026