General09 June 2026

பெண்கள் பாதுகாப்பிற்கான "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை": தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆரம்பம்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாலை 5 மணிக்கு, பெண்களின் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகம், தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிறப்பு காவல் படை அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி "சிங்க பெண் சிறப்பு அதிரடிப்படை” எனும் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு பணிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 'சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டம் 2026 மே 10 அன்று தமிழக முதலமைச்சரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, கையொப்பமிடப்பட்டது.

அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு விழா தொடங்கும் என்றும், முதல்வர் இத்திட்டத்தை தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றசெயல்கள் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes