நாட்டின் 74 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, 8,000க்கும் அதிகமான டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த விசேட களப் பரிசோதனை நடவடிக்கைகளின் போதே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்த சோதனை நடவடிக்கையின் போது மொத்தமாக 31,196 வளாகங்கள் மற்றும் இடங்கள் விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு பரிசோதிக்கப்பட்ட இடங்களில், 8,121 இடங்கள் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அதிகளவிலான அபாயத்தைக் கொண்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதனால், பொதுமக்கள் தங்களது வீடுகள், பாடசாலைகள் மற்றும் வேலைத்தல சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் மேலதிகமாக அறிவுறுத்தியுள்ளனர்.
Latest News
உலகின் மிகச்சிறந்த உணவு நகரங்களின் பட்டியல் வெளியீடு
Local
09 June 2026
வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்ப மேம்பாட்டுக்காக 5 வருட விசேட திட்டம்: அமைச்சரவை அனுமதி
Local
09 June 2026
"நாங்கள் செய்வதே சரி என்பதல்ல நல்ல அரசாங்கம்"
Local
09 June 2026
த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
Local
09 June 2026
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு புதிய காணியுடன் 50 இலட்சம் ரூபா வீட்டுத் திட்டம்
Local
09 June 2026
நாடு முழுவதும் 8,000க்கும் அதிகமான நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு!
Local
09 June 2026
கடலுக்குச் செல்ல வேண்டாம்! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
Local
09 June 2026
பெண்கள் பாதுகாப்பிற்கான "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை": தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆரம்பம்
Local
09 June 2026
முதலமைச்சர் விஜய்யுடன் அன்புமணி ராமதாஸ் அதிரடி சந்திப்பு : 25 நிமிடங்கள் நடந்தது என்ன?
Local
09 June 2026
"கொழும்பில் மோசமான நிலையில் உள்ள 27 மாடிக் குடியிருப்பு தொகுதிகள்!"
Local
09 June 2026