எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) சேவைகள் வழங்கப்படமாட்டாது என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர் சேமலாப நிதியின் நன்மைப் பணம் வழங்குதல் மற்றும் பதிவுச் சேவைகள் ஆகியவை குறித்த இரண்டு நாட்களிலும் மேற்கொள்ளப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இரண்டு நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக ஏற்கனவே நேரத்தை முன்பதிவு செய்தவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தொழில் திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று, தாங்கள் முன்பதிவு செய்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர் சேமலாப நிதியின் நன்மைப் பணம் வழங்குதல் மற்றும் பதிவுச் சேவைகள் ஆகியவை குறித்த இரண்டு நாட்களிலும் மேற்கொள்ளப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இரண்டு நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக ஏற்கனவே நேரத்தை முன்பதிவு செய்தவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தொழில் திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று, தாங்கள் முன்பதிவு செய்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.









