நேபாளத்தில் குறைந்தது 1,924 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது
அவர்களில் குறைந்தது 517 வெளிநாட்டவர்களும் அடங்குவர் -
எனினும் சூழ்நிலை மிக வேகமாக மாறி வருவதால் வெவ்வேறு அதிகார அமைப்புகள் வெவ்வேறு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளன
இந்தநிலையில், நேபாளத்தில் இறப்பு எண்ணிக்கை 579 ஆக உயர்ந்துள்ளதாகப் பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவிக்கிறது,
அத்துடன் சீனாவின் திபெத்தில் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளதுடன், அங்கு 558 பேர் காணாமல் போயுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திபெத் நிலவரம் தொடர்பில் சீன அரசு ஊடகங்களின் செய்திகளையே நம்பவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத் நிலவரம் தொடர்பில் சுயாதீன தகவல்களை பெறமுடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
நேபாளத்தில் இதுவரை சுமார் 4,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்,
சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாலும், தொடர் கனமழை பெய்து வருவதாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவது மீட்புப் படைகளுக்கு மிகுந்த சவாலாக உள்ளது.
வெள்ளத்திற்குப் பிறகு உருவான ஏரி ஒன்று உடையும் அபாயம் உள்ளதாக அஞ்சி, திபெத்தில் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வார இறுதி நாட்களில் மேலும் மழை பெய்யக்கூடும் என்றும், சில பகுதிகளில் சேற்று நிலச்சரிவுகள் (mudslides) ஏற்படலாம் என்றும் சீன இராணுவம் எச்சரித்துள்ளது.









