யுக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே அமைந்துள்ள மைலா (Myla) கிராமத்தின் ஆயுத கிடங்கு மீது ரஷ்யா நடத்திய இரவு நேர ஆளில்லா வானுார்தி தாக்குதலில் குறைந்தது 37 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் உள்ளூர் கிராமத் தலைவர் தராஸ் டிடிச் (Taras Didych) உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் மீது ஆளில்லா வானுார்தி மோதியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து, ஆபத்தான சூழ்நிலை காரணமாக அந்தப் பகுதியிலிருந்து சுமார் 400 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தநிலையில், குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வெடிபொருட்களைப் பாதுகாப்பாகச் சேமிக்க அனுமதித்தது குறித்தும், அதிகாரிகளின் அலட்சியம் (Official Negligence) தொடர்பாகவும் யுக்ரைன் அரசு குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.









