புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை எனக் குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய நிலைமைகளை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அதற்கேற்பவே அவர்கள் முடிவுகளை எடுப்பார்கள் என்றும் வலியுறுத்தினார்.









