சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (08) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,305 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.32 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை விலை மாற்றங்களின் தாக்கம் இலங்கை சந்தையிலும் பிரதிபலிக்கக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதி வலுப்பெற்றமை மற்றும் உலக அரசியல் நிலவரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவுக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








