மாணவர்களின் ஊட்டச்சத்து தரத்தை உயர்த்த புதிய யோசனை: சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணிக்கு வாய்ப்பு!

Wednesday, 29 July 2026 - 19:42

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%3A+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
தமிழகப் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறையாவது சிக்கன் பிரியாணியை வழங்கும் யோசனை தொடர்பில் அரசு பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது.

கூட்டத்தின் போது, மாணவர்களின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சத்துணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணியைச் சேர்க்க வேண்டும் என சில சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன், இந்த யோசனை தொடர்பில் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சத்துணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.