பெல்லன்வில ரஜமஹா விகாரையின் எசல மஹா பெரஹரவை முன்னிட்டு ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் பல வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காவல்துறை தலைமையகம், ஊர்வலங்கள் இடம்பெறும் காலப்பகுதியில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
பெரஹரா நாளை (13) இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணிக்கு நிறைவடையும்.
இந்த காலப்பகுதியில், 119 மஹரகம-தெஹிவளை பேருந்து பாதையூடான போக்குவரத்து பொரலஸ்கமுவ நகரம் மற்றும் பெல்லந்தர சந்திப்பில் கட்டுப்படுத்தப்படும்.









