பிலிப்பைன்ஸ் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு - இரு மாணவர்கள் பலி!

Tuesday, 18 August 2026 - 12:01

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சாம்போங்கா நகரின் உயர்நிலைப் பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்த மாணவர் ஒருவர், மாணவர்கள் சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், பின்னர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அந்த நகர முதலவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கி பிரயோகத்தில் மற்றுமொரு மாணவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை அடுத்து பாடசாலை வளாகத்தை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறை, நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.