General23 September 2025

மின் விநியோகத்தை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு – நளிந்த ஜயதிஸ்ஸ

மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாக உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், ஊழியர்களின் விடுமுறையை இரத்து செய்யும் முடிவு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் "மின்தடையை அனுமதிக்க அரசாங்கம் தயாராக இல்லை. இது ஒரு அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து தொடருங்கள், வேலை செய்ய முடியாவிட்டால் இழப்பீடு பெற்றுச் செல்லலாம். ஆனால் இந்த பணியைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும். இந்த சீர்திருத்தங்களைச் செய்யாமல் முன்னேற முடியாது' என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்காவிட்டால் இலங்கை நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
Related Recomands
Hiru TV News | Programmes