Top Story
நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “நாடே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும், போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டத் திருத்தங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வழக்குத் தாமதங்களைத் தவிர்க்கத் தடயவியல் அறிக்கைகள் வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு, கடந்த ஜூலையில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறைக் கைதிகளின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவை வகைப்படுத்தி தரவுகளை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் 5 சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையால் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறைகளில் பாதுகாப்பு கெமராக்களை நிறுவ நிதி ஒதுக்குமாறும், புனர்வாழ்வு சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுக்க "மிதுரு பாசல" திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கான போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விபரங்களுக்கு
General10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

General 10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!

General 10 August 2026
கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!

வடக்கு , கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை - பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!

General 10 August 2026
வடக்கு , கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை - பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

General 10 August 2026
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தில் சிறுபோக நெல் அறுவடை நிறைவு

General 10 August 2026
கிழக்கு மாகாணத்தில் சிறுபோக நெல் அறுவடை நிறைவு

கேகாலையில் தாமதமாக வழங்கப்பட்ட வினாத்தாள்: இருவேறு கோணங்களில் விசாரணை!

General 10 August 2026
கேகாலையில் தாமதமாக வழங்கப்பட்ட வினாத்தாள்: இருவேறு கோணங்களில் விசாரணை!
International News

கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

International 11 August 2026
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!

International 10 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!

International 10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!

தாய்லாந்தில் பாடசாலைகளைத் தொடர்ந்து அரச அலுவலகத்திலும் துப்பாக்கிச்சூடு!

International 10 August 2026
தாய்லாந்தில் பாடசாலைகளைத் தொடர்ந்து அரச அலுவலகத்திலும் துப்பாக்கிச்சூடு!

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் : வியக்க வைக்கும் தகவல்

International 10 August 2026
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் : வியக்க வைக்கும் தகவல்

திருட்டுக்கு பயந்து புதைத்த ரூ.5 இலட்சம் பணத்தை அரித்த கறையான்கள்!

International 10 August 2026
திருட்டுக்கு பயந்து புதைத்த ரூ.5 இலட்சம் பணத்தை அரித்த கறையான்கள்!

உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

International 10 August 2026
உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு

International 10 August 2026
சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு

மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!

International 10 August 2026
மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!

டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

International 10 August 2026
டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!

International 09 August 2026
கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!

காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!

International 09 August 2026
காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!

உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!

International 09 August 2026
உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!

மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!

International 09 August 2026
மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்!

International 09 August 2026
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்!
More News
General10 August 2026

துறைமுக நகரில் குடியேறுவோருக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை: எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை

கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) எதிர்காலத்தில் குடியேறுவதற்கு திட்டமிடும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதால், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படலாம் என உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் எச்சரித்துள்ளார்.துறைசார் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், துறைமுக நகரத்தில் குடியேறக்கூடியவர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட போதிலும், அவர்களால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினார்."ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றால், அவர்களால் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வாக்களிக்க முடியும். ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு இடம் எதுவும் இல்லை. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்" என்று தெரிவித்த அவர், துறைமுக நகரத்துக்காக பிரத்தியேகமாக தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.இருப்பினும், 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம், துறைமுக நகர நிலப்பரப்பு ஏற்கனவே கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் மாவட்ட ரீதியிலான பிரதிநிதித்துவம் தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர்கள் வாதிட்டனர்.இதற்கு பதிலளித்த எஸ்.எம். மரிக்கார், வர்த்தமானி அறிவித்தலானது நாடு தழுவிய மற்றும் மாவட்ட ரீதியிலான தேர்தல்களுக்கான சேர்க்கையை உறுதிப்படுத்திய போதிலும், உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவப் பிரச்சினையை அது தீர்க்கவில்லை எனத் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டால், அது துறைமுக நகரத் திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.தற்போது அங்கு நிரந்தர வாக்காளர்களாக மக்கள் யாரும் வசிக்கத் தொடங்காத நிலையிலும், எதிர்காலத்தில் இங்கு குடியமரப்போகும் மக்களுக்கான வாக்களிக்கும் உரிமை மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவம் குறித்தே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த விவாதத்தை எழுப்பியுள்ளார்.

விபரங்களுக்கு
துறைமுக நகரில் குடியேறுவோருக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை: எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை
General10 August 2026

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கம்!

சமீபத்தில் தொடங்கப்பட்ட 'இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தை' சர்வதேசக் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாகச் சர்வதேசக் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாம் மொஃபாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமைக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் நிறுவனத் தலைவராக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கம்!
General10 August 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை மாஅதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்ற விசாரணை பணியகத்துக்கு இன்று வருகை தந்தார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபரங்களுக்கு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது
General10 August 2026

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது உள்ளிட்ட திருத்தங்களை உள்ளடக்கிய 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், குறித்த அரசியலமைப்பு திருத்த வரைவு சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தமது கட்சி தொடர்ச்சியாக எதிர்த்து வருவதாகத் தெரிவித்தார்.அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பைக் கட்டியெழுப்பும் வகையில் அரசியல் பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், "நாங்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம். அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து எமது சட்டத்தரணிகளுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை
General10 August 2026

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார். காவல்துறை மாஅதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

விபரங்களுக்கு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
International News

கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

International 11 August 2026
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!

International 10 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!

International 10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!

தாய்லாந்தில் பாடசாலைகளைத் தொடர்ந்து அரச அலுவலகத்திலும் துப்பாக்கிச்சூடு!

International 10 August 2026
தாய்லாந்தில் பாடசாலைகளைத் தொடர்ந்து அரச அலுவலகத்திலும் துப்பாக்கிச்சூடு!

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் : வியக்க வைக்கும் தகவல்

International 10 August 2026
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் : வியக்க வைக்கும் தகவல்

திருட்டுக்கு பயந்து புதைத்த ரூ.5 இலட்சம் பணத்தை அரித்த கறையான்கள்!

International 10 August 2026
திருட்டுக்கு பயந்து புதைத்த ரூ.5 இலட்சம் பணத்தை அரித்த கறையான்கள்!

உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

International 10 August 2026
உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு

International 10 August 2026
சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு

மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!

International 10 August 2026
மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!

டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

International 10 August 2026
டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!

International 09 August 2026
கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!

காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!

International 09 August 2026
காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!

உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!

International 09 August 2026
உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!

மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!

International 09 August 2026
மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்!

International 09 August 2026
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்!
Sports Stories
Explore More
சந்திக ஹதுருசிங்கவுக்கு 164,000 அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்

சந்திக ஹதுருசிங்கவுக்கு 164,000 அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பான நீண்டகால சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், அவருக்கு 164,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 5.5 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் (SLC) நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டதனை அடுத்து, சுவிட்சர்லாந்திலுள்ள விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை மீளப் பெற ஹதுருசிங்க ஒப்புக்கொண்டுள்ளார். ஒப்பந்தம் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் ஹதுருசிங்க 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கோரியிருந்தார். எனினும், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னேறாத நிலையில், அவர் சுமார் 450,000 அமெரிக்க டொலர்களைக் கோரி புதிய சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்தார். இதனையடுத்து எட்டப்பட்ட சமரச உடன்பாட்டின்படி, அவரது வரிப் பொறுப்பில் 50 சதவீதப் பங்கையும் உள்ளடக்கி மொத்தம் 200,000 அமெரிக்க டொலர்களைப் பெற உடன்பாடு எட்டப்பட்டது. இதில் 164,000 அமெரிக்க டொலர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் செலுத்தி வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.2017 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்ட ஹதுருசிங்கவின் காலத்தில், இலங்கை அணி விளையாடிய 67 சர்வதேச போட்டிகளில் 24 போட்டிகளில் வெற்றியையும், 38 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது. அத்துடன், அவரது பதவிக் காலத்தில் ஒழுக்கமின்மை சார்ந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. தனிநபர் விசாரணை அதிகாரி நடத்திய விசாரணையில், அணிக்குள் சீர்குலைவை ஏற்படுத்தியமை மற்றும் வீரர்களைப் போதியளவு தயார்படுத்தத் தவறியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவராக காணப்பட்டார். இந்தப் பிரச்சினை காரணமாக அதிகளவிலான சட்டச் செலவுகள் ஏற்பட்ட நிலையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவும் (கோப்) இதில் தலையிட்டு, கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கும் பொருட்டு இரு தரப்பும் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசத் தீர்வைக் காணுமாறு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ரங்கன ஹேரத்திற்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளது: ரவிச்சந்திரன் அஸ்வின்

ரங்கன ஹேரத்திற்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளது: ரவிச்சந்திரன் அஸ்வின்

ரங்கன ஹேரத்தின் ஓய்வுக்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சுப் பலம் கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதே அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் எவரும் இலங்கை அணியில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது சமூகத் தளத்தில் இது குறித்துப் பேசியுள்ள அஸ்வின், ரங்கன ஹேரத் இன்னும் சுழற்பந்து வீச்சை தலைமை தாங்கி நடத்தியிருந்தால், இந்தியாவிற்கு எதிராக இலங்கைக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்திருக்கும் எனக் கூறியுள்ளார். இலங்கை அணியில் யார் சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ரங்கன ஹேரத் இன்னும் விளையாடிக்கொண்டிருந்தால், இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக நான் சொல்லியிருப்பேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் முன்னணி இடதுகை சுழற்பந்து வீச்சாளராக பிரபாத் ஜெயசூரியவை சுட்டிக்காட்டிய அஸ்வின், காற்றினூடாக அவர் சற்று மெதுவாகப் பந்தை வீசுவது இந்திய துடுப்பாட்ட வரிசைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பதில் சந்தேகம் வெளியிட்டுள்ளார். அவர்களிடம் பிரபாத் ஜெயசூரிய என்ற இடதுகை சுழற்பந்து வீச்சாளர் உள்ளார் ,அவர் சற்று மெதுவாகப் பந்துவீசுகிறார். இந்த இந்திய துடுப்பாட்ட வரிசைக்கு எதிராக நீங்கள் மெதுவாகப் பந்துவீசினால் அது எளிதாக இருக்காது. ஏனெனில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பலர் 'பேக் ஃபூட்' (Back foot) நகர்வில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள்" என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் நிஷான் பீரிஸ் ஆகியோரை சுட்டிக்காட்டிய அஸ்வின், இலங்கை 'ஏ' தொடரின் போது தன்னை ஈர்த்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் குறித்துக் குறிப்பிட்ட போதிலும், அவரது பெயரை நினைவுகூர முடியவில்லை என்றும் கூறினார். காலி மைதானத்தில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி எவ்வளவு சவாலாக விளங்கும் என்பதை அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களின் கலவையே தீர்மானிக்கும் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

விபரங்களுக்கு
தங்க ராணிகளின் சமர் ( Battle of Golden Queens) முரண்பாட்டுடன் நிறைவு: விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்த கல்லூரி

தங்க ராணிகளின் சமர் ( Battle of Golden Queens) முரண்பாட்டுடன் நிறைவு: விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்த கல்லூரி

மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிரன்ஸஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மற்றும் யசோதரா வித்தியாலயத்துக்கு இடையிலான 3 ஆவது "தங்க ராணிகளின் சமர்"( Battle of Golden Queens) வருடாந்த கிரிக்கெட் போட்டி, 2 ஓட்டங்கள் வித்தியாசத்திலான பரபரப்பான முடிவுக்குப் பின்னர் முரண்பாடுகளுடன் நிறைவடைந்துள்ளது. போட்டியின் ஏற்பாடுகள் மற்றும் நடுவர் முடிவுகள் தொடர்பில் கவலை வெளியிட்ட யசோதரா வித்தியாலயத்தின்; அதிபர், இனிவரும் காலங்களில் இந்த வருடாந்த கிரிக்கெட் போட்டியில் தங்கள் பாடசாலை பங்கேற்காது என போட்டிக்கு பின்னரான நிகழ்வின் போது பகிரங்கமாக அறிவித்தார். நடுவர்கள் மற்றும் போட்டித் தீர்ப்பாளரின் நியமனம் தொடர்பான முரண்பாடுகள், நாணய சுழற்சி நடத்தப்பட்ட முறை மற்றும் போட்டியின் போது வழங்கப்பட்ட நடுவர் தீர்மானம் குறித்தும் அவர் பல கேள்விகளை எழுப்பினார். இந்தநிலையில், 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்வியைத் தொடர்ந்து, விருது வழங்கும் விழாவின் போது விருதுகளைப் பெற்றுக்கொள்ள யசோதரா வித்யாலய அணியின் வீராங்கனைகள் முன்வரவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பிரின்ஸஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் அதிபர், போட்டி அதிகாரிகளுடனான தொடர்பாடலில் முன்னர் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டபோதிலும், போட்டிக்கு முன்னதாகவே அந்த விவகாரம் கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். போட்டி அதிகாரிகளை நியமிக்கும் பாரம்பரிய நடைமுறைப் படியே அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், போட்டிக்கு முன்னர் இது குறித்து யசோதரா வித்யாலயாவிற்கு தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரண்டு அதிபர்களுக்கும் இடையிலான இந்த பகிரங்க மோதல் மற்றும் விருது வழங்கும் விழாவில் வீராங்கனைகள் பங்கேற்காதமை சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பாடசாலை விளையாட்டு நிகழ்வொன்றில் இவ்வாறான நடத்தைகள் மாணவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும், வெற்றி தோல்விகளை ஏற்கும் விளையாட்டுத் தனத்தை வளர்ப்பதே பாடசாலை விளையாட்டின் நோக்கம் என்றும் பல சமூக வலைத்தளப் பயனர்கள் விமர்சித்துள்ளனர். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலும் , பிரின்ஸஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்று போட்டியை விறுவிறுப்பாக முடிவுக்குக் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சாய் சுதர்சனுக்கு பதில் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில்!

சாய் சுதர்சனுக்கு பதில் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில்!

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியத் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளதுடன், அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.பெங்களூரிலுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த சாய் சுதர்சன், வலது கால் விரல் காயத்திலிருந்து மீண்டு வரும் போதிலும், தொடரில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மருத்துவக் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.இதனையடுத்து, ஆடவர் தேர்வுக்குழுவால் சர்ஃபராஸ் கான் மாற்று வீரராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் கொழும்பில் இந்திய அணியுடன் இணையவுள்ளார்.மாற்றியமைக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணி விவரம்:சுப்மன் கில் (அணித்தலைவர்), கே.எல். ராகுல் (துணைத் தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின், ஆகிப் நபி, சர்ஃபராஸ் கான்.

விபரங்களுக்கு
இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின்' முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் சங்கத்தின் ஆரம்பப் பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் வனிந்து ஹசரங்க, சமரி அத்தபத்து உள்ளிட்ட நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.இலங்கையின் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் உரிமைகள், நலன்புரி சேவைகள் மற்றும் தொழில்முறை சார்ந்த விடயங்களில் சுதந்திரமான மற்றும் கூட்டுப் பிரதிநிதித்துவத்தை வழங்குவதையே இந்த புதிய சங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.தொழில்முறை கிரிக்கெட் வீரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச அமைப்பான சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் இந்த புதிய அமைப்பு இணைக்கப்படவுள்ளது.அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற உலகின் முன்னணி கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் வீரர்களின் சங்கங்கள் இயங்கி வரும் நிலையில், இலங்கையிலும் இவ்வாறான அமைப்பொன்று உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!

15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!

இந்திய அணியின் இளம் அதிரடி துடுப்பாட்டக்காரர் வைபவ் சூர்யவன்சியின் (Vaibhav Sooryavanshi) உண்மையான வயது குறித்த சந்தேகங்கள் இந்தியாவிற்கு வெளியே இன்னமும் நீடிப்பதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ (Brett Lee) தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரது வயது முக்கியமல்ல என்றும், அவரது திறமையே முதன்மையானது என்றும் அவர் பாராட்டியுள்ளார். அந்த நாட்டுத் தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தனது கருத்துக்களைத் தெரிவித்த பிரெட் லீ, "இந்தியாவிற்கு வெளியே உள்ள பலரும் 'அவருக்கு உண்மையில் 15 வயதுதானா?' என்று என்னிடம் கேட்கிறார்கள். உலகளவில் தற்போது இதுவே பெரிய விவாதப் பொருளாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். "அவருக்கு 15 வயதாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி. ஒருவேளை 17 அல்லது 18 வயதாக இருந்தாலும் அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? அந்தச் சிறுவனால் மிகச் சிறப்பாகக் கிரிக்கெட் விளையாட முடிகிறது, அதுவே முக்கியமானது" என்று பிரெட் லீ கூறியுள்ளார். அத்துடன், வைபவ் சூர்யவன்சி இந்திய கிரிக்கெட்டிற்குக் கிடைத்த மிகச்சிறந்த திறமைசாலி என்றும், அவர் மீது தேவையற்ற அழுத்தங்களைச் சுமத்தாமல், இயல்பாக விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு இன்டர் மியாமி வீரர் ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு இன்டர் மியாமி வீரர் ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ டி போல் (Rodrigo De Paul) மைதானத்தில் கோல் அடித்த பிறகு தனது உணர்வுபூர்வமான அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். முன்னணி கால்பந்து தொடரில் (MLS) இன்டர் மியாமி அணிக்காக விளையாடிய ரொட்ரிகோ டி போல், போட்டியின் 31-ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு சிறப்பான கோலை அடித்தார். கோல் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடிய அவர், தனது ஜெர்ஸியைக் கழற்றி, அதனுள் அணிந்திருந்த மெஸ்ஸியின் 10-ஆம் இலக்க ஜெர்ஸியைக் காண்பித்து மெஸ்ஸியினுடைய குடும்பத்திற்குத் தனது ஆதரவையும் அஞ்சலியையும் வெளிப்படுத்தினார். மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி, ரொசாரியோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். லியோனல் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் அவரது தந்தை ஜோர்ஜ் முக்கியமான பங்கு வகித்தார். மெஸ்ஸியின் முகவராகவும், அவரது வணிக விவகாரங்களை நிர்வகிப்பவராகவும் செயற்பட்ட அவர், மெஸ்ஸி சிறுவயதாக இருந்தபோது பார்சிலோனா கால்பந்து கழக அணியின் 'லா மாசியா' தொழிற்பயிற்சிக் கூடத்தில் சேர்வதற்கு முக்கியக் காரணமாகவும் அவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!

இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, முன்னணி துடுப்பாட்ட வீரர்களான பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் காயம் காரணமாக இலங்கை அணி பாரிய தெரிவு சிக்கலை எதிர்கொண்டுள்ளது. காயங்களிலிருந்து மீண்டு வரும் பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் போட்டியில் நிஸ்ஸங்க விளையாடமாட்டார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குசல் மெண்டிஸ் முழுத் தொடரிலிருந்தும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. நிஸ்ஸங்கவுக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரராக நிஷான் மதுஷ்க களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இவர் இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 66 ஓட்டங்களைப் பெற்று தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, குசல் மெண்டிஸுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளராக யாரை நியமிப்பது என்பதில் இலங்கை அணிக்கு பெரும் குழப்பம் நிலவுகிறது. விக்கெட் காப்பாளர்களாக சதீர சமரவிக்ரம, அஞ்சன பண்டார மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். லஹிரு உதார அல்லது தினேஷ் சந்திமால் ஆகியோரை விக்கெட் காப்பாளர்களாகப் பயன்படுத்துவது குறித்தும் யோசிக்கப்பட்டாலும், அதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம்

‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!

நடிகர் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சச்சின்'. இந்த திரைப்படமும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அமைந்த இதன் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தநிலையில், குறித்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு" என்று வசனம் பேசிய சிறுமியின் தற்போதைய புதிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், தான் தற்போது இசைத்துறையில் கவனம் செலுத்தி வருவதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இந்த காணொளி தற்போது இணையவாசிகளிடையே வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிறாரா நடிகர் தனுஷ்?

அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிறாரா நடிகர் தனுஷ்?

நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அவரது நற்பணி மன்றம் சார்பில் கோவை மாவட்டத்தில் புதிய கிளைகளைத் தொடங்கவும், உறுப்பினர்களைச் சேர்க்கவும் அறிவுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்களில் "தலைவர் தனுஷ்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகர் தனுஷ், நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், நிழற்படம் எடுத்தோம் என்று மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இந்த நிலையில், கோவை மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிதாக நற்பணி மன்றங்களைத் தொடங்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் மன்ற நிர்வாகியைத் தொடர்பு கொள்ளுமாறு அகில இந்திய தனுஷ் நற்பணி மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், தனுஷ் விரைவில் அரசியல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், அடுத்ததாக 'லப்பர் பந்து' படத்தின் இயக்குநர் இயக்கத்திலும், இயக்குநர் வெற்றிமாறனின் 'தமிழ் முருகன்' திரைப்படத்திலும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
‘டேர்டெவில்’ திரைப்படத்தின் கதை இப்படி தான் இருக்கும்: மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்

‘டேர்டெவில்’ திரைப்படத்தின் கதை இப்படி தான் இருக்கும்: மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘டேர்டெவில்’ திரைப்படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "ஜிபியூ (GBU) போல இன்னொரு திரைப்படம் எடுக்க முடியாது. அதேவேளையில் ‘டேர்டெவில்’ திரைப்படம் GBU போன்று இருக்காது. இது முழுக்க முழுக்க குடும்பங்கள், சிறுவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படியான திரைப்படமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் அஜித் குமார் அளித்த ஊக்கம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட அவர், "தன் வாழ்க்கையின் மிகக் கடினமான தருணத்தில் அஜித் சாரைச் சந்தித்தேன். அப்போது அவர், ' உன்னால் முடியும், உன்னிடம் ஏதோ ஒன்று உள்ளது' என்று கூறி எனக்கு ஊக்கம் அளித்தார். அவர் அளித்த அந்த ஊக்கமே என்னை ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை எடுக்க வைத்தது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் ‘டேர்டெவில்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது.

விபரங்களுக்கு
சம்பளத்தில் மட்டுமல்ல... செல்வாக்கிலும் முன்னணியிலுள்ள நடிகைகளின் பட்டியல் வெளியீடு!

சம்பளத்தில் மட்டுமல்ல... செல்வாக்கிலும் முன்னணியிலுள்ள நடிகைகளின் பட்டியல் வெளியீடு!

திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு, வேதனம், வீட்டின் மதிப்பு, அவர்கள் பயன்படுத்தும் சிற்றூர்ந்து மற்றும் வாழ்க்கை முறை குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவருகின்றன.அந்த வகையில், இந்திய திரையுலகில் தற்போதைய நிலவரப்படி அதிக செல்வாக்கும், உயர்ந்த வர்த்தக நாம மதிப்பும் கொண்ட முன்னணி 10 நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.இதில் எதிர்பார்த்தது போலவே பொலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஆலியா பட் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது படங்கள் தாண்டி விளம்பரங்களிலும் ஆலியா பட் ஜொலித்து வருகிறார். இவர் 20க்கும் மேற்பட்ட வர்த்தக நாமங்களின் விளம்பரத் தூதராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.2ஆம் இடத்தில் தீபிகா படுகோனே, 3ஆம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா, 4ஆம் இடத்தில் கரீனா கபூர், 5ஆம் இடத்தில் கியாரா அத்வானி ஆகியோர் உள்ளனர். 6 முதல் 10 வரையிலான இடங்களில் முறையே கீர்த்தி சனோன், அனன்யா பாண்டே, சமந்தா, தமன்னா, ஜான்வி கபூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டில் இருந்து சமந்தா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அன்று சூர்யாவைப் பார்க்க முடியாத ஏக்கம்... இன்று அவருக்கே ஜோடி! - மமிதா பைஜு கூறிய நெகிழ்ச்சிச் சம்பவம்!

அன்று சூர்யாவைப் பார்க்க முடியாத ஏக்கம்... இன்று அவருக்கே ஜோடி! - மமிதா பைஜு கூறிய நெகிழ்ச்சிச் சம்பவம்!

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடித்துள்ளமை குறித்து நடிகை மமிதா பைஜு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.மலையாளத்தில் வெளியான "பிரேமலு" திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மமிதா பைஜு, தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த "ஜனநாயகன்" திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.தற்போது இந்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் கொச்சியில் நடைபெற்றது.அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகை மமிதா பைஜு,கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் சூர்யா கொச்சிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.அப்போது நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது அவரை நேரில் சந்தித்துவிட வேண்டும் என விரும்பினேன். இருப்பினும், சிறுவயது மாணவி என்பதாலும் கோட்டயத்தில் இருந்து கொச்சிக்கு பயணம் செய்வது சிரமம் என்பதாலும் எனது பெற்றோர் அதற்கு அனுமதிக்கவில்லை.ஆனால், எனது சகோதரர் கொச்சி சென்று அந்நிகழ்வில் பங்கேற்றதுடன், நடிகர் சூர்யாவுடன் நிழற்படமும் எடுத்துக்கொண்டார். அந்தப் நிழற்படத்தைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது.ஆனால், காலம் இன்று எவ்வளவு மாறிவிட்டது! அன்று நேரில் பார்ப்பதற்குக்கூட அனுமதி கிடைக்காத நிலை மாறி, இன்று அவரது திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளமை கடவுளின் ஆசீர்வாதமே எனத் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில் இயக்குநர் ஷகீல் நூரானி கைது

நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில் இயக்குநர் ஷகீல் நூரானி கைது

33 வயதான நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில், 73 வயதான பிரபல பொலிவூட் திரைப்பட இயக்குநர் ஷகீல் நூரானி கைது செய்யப்பட்டுள்ளார். வரவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து கலந்துரையாடுவதற்காக, மும்பை மால்வாணி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அந்த நடிகையை வரவழைத்த இயக்குநர் நூரானி, அவருக்குப் போதைப்பொருள் கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதுடன், மிரட்டலும் விடுத்ததாகக் காவல்துறையில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இயக்குநர், போரிவலி விடுமுறை கால நீதிமன்றத்தில் (Borivali Holiday Court) முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை ஆகஸ்ட் 12-ஆம் திகதி வரை காவல்துறை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் ஷகீல் நூரானி, 'படே தில்வாலா' மற்றும் 'ஜோரு கா குலாம்' உள்ளிட்ட பிரபல ஹிந்தித் திரைப்படங்களை எழுதியும், இயக்கியும், தயாரித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
நாட்டாமை குடும்பம்

நாட்டாமை குடும்பம்" பச்சை குத்தினால் என்னை நேரடியாகச் சந்திக்கலாம்: சரத்குமார்

"நாட்டாமை குடும்பம்" (Nattamai family) என்று பச்சை (Tattoo) குத்திக் கொண்டால், அதைத் தன்னை நேரடியாகச் சந்திப்பதற்கான 'கிரீன் கார்ட்' ஆகப் பயன்படுத்தலாம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆதரவாளர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது யாருக்கும் கட்டாயமில்லை என்றும், தனக்கும் இந்தப் பச்சையைக் குத்திக் கொள்ளும் விருப்பம் இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பான நிழற்படங்கள் வெளியாகி இணையவாசிகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////