Top Story
இலங்கையின் உயர்கல்வித் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பல்கலைக்கழகங்களின் தற்போதைய நிலை குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள தரவுகள் நாட்டின் கல்விச் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. 
 
சூரியன் செய்திப் பிரிவால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட 2025 ஜனவரி மாத புள்ளிவிபரங்களின்படி, அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கும் தற்போது பணியிலுள்ளோருக்கும் இடையே பாரிய இடைவெளி நிலவுகிறது. 
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, நாட்டின் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஒட்டுமொத்தமாக 7,418 பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 
 
இது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 25 வீதமாகும். 
 
நிரந்தரக் கல்விசார் பணியாளர்கள்: 
 
பல்கலைக்கழகங்களின் முதுகெலும்பாக விளங்கும் நிரந்தர கல்விசார் பணியாளர் பதவிகளுக்காக 9,332 இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
 
எனினும், தற்போது 6,946 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 
 
இதன் காரணமாக 2,048 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன. 
 
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நிலவும் நிரந்தரக் கல்விசார் பணியாளர் வெற்றிடங்கள் கற்பித்தல் தரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. 
 
பேராதனைப் பல்கலைக்கழகம் அதிகபட்சமாக 305 நிரந்தர விரிவுரையாளர் வெற்றிடங்களைக் கொண்டுள்ளது. 
 
மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் 273 வெற்றிடங்களுடன் இயங்கி வருகின்றது. 
 
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் 227 இடங்களும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 179 நிரந்தர விரிவுரையாளர் பணியிடங்களும் ருகுணு பல்கலைக்கழகத்தில் 195 வெற்றிடங்களும் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. 
 
தற்காலிகக் கல்விசார் பணியாளர்கள்: 
 
தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரிவில் 3,742 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,186 பேர் பணியில் உள்ளனர், இங்கு 725 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 
 
கல்விசாராப் பணியாளர்கள்: 
 
நூலகர், தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவியாளர்கள் உள்ளிட்ட பிரிவில் 16,351 பணியாளர் இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
 
ஆனால், தற்போது 11,875 பேர் மட்டுமே பணியில் இருப்பதால், இப்பிரிவில் மாத்திரம் 4,476 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 
 
இவற்றில் நூலகர் பதவிகளுக்கு 41 வெற்றிடங்களும் முகாமைத்துவ மற்றும் நிதி பிரிவுக்கு 205 வெற்றிடங்களும் ஏனைய நிறைவேற்று அலுவலர் பதவிகளுக்கு 90 வெற்றிடங்களும் மருத்துவ அதிகாரி பதவிகளுக்கு 43 வெற்றிடங்களும் கல்விசார் ஒத்துழைப்பு அலுவலர் பதவிகளுக்கு 377 வெற்றிடங்களும் தொழில்நுட்ப பதவிகளுக்கு 687 வெற்றிடங்களும் முகாமைத்துவ உதவியாளர் பதவிகளுக்கு 794 வெற்றிடங்களும் முதன் நிலை பணியாளர் பதவிகளுக்கு 2239 வெற்றிடங்களும் காணப்படுகின்றன. 
 
பணியாளர் வெளியேற்றமும் எதிர்கால நடவடிக்கைகளும் 
 
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆகஸ்ட் வரையிலான குறுகிய காலப்பகுதியில் மட்டும் 566 நிரந்தர விரிவுரையாளர்கள் தமது சேவையை விட்டு விலகியுள்ளனர். 
 
இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளுக்குச் சென்றமை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது. 
 
இவற்றில் 329 விரிவுரையாளர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர், 106 பேர் ஓய்வுபெற்றுள்ளனர், வெளிநாடு செல்லுதல் உள்ளிட்ட தனிப்பட்ட ஏனைய காரணங்களுக்காக 131 பேர் வெளியேறியுள்ளனர். 
 
இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக கடந்த வருடம் அரசாங்கம் 1,209 கல்விசார் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
மேலும், பல்கலைக்கழகங்கள் தமது நிதி ஒதுக்கீட்டிற்குள் இருந்து தேவையான புதிய விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வழிகாட்டல்களையும் பிரதமர் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
விபரங்களுக்கு
General22 January 2026
இலங்கை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் ஆளணி நெருக்கடி: 7,400 க்கும் அதிகமான வெற்றிடங்கள்
International News

டியாகோ கார்சியா விவகாரம்: பிரித்தானியாவின் முடிவை 'முட்டாள்தனம்' எனச் சாடுகிறார் ட்ரம்ப்

International 20 January 2026
டியாகோ கார்சியா விவகாரம்: பிரித்தானியாவின் முடிவை 'முட்டாள்தனம்' எனச் சாடுகிறார் ட்ரம்ப்

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இடித்து அகற்றியது இஸ்ரேல்

International 20 January 2026
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இடித்து அகற்றியது இஸ்ரேல்

விபத்தால் விரிசலா? விரிசலால் விபத்தா? ஸ்பெய்ன் தொடருந்து விபத்தில் மர்மம்!

International 20 January 2026
விபத்தால் விரிசலா? விரிசலால் விபத்தா? ஸ்பெய்ன் தொடருந்து விபத்தில் மர்மம்!

மரணத்துடன் போராடும் ரசிகரின் கடைசி ஆசை: GTA 6-ஐ விளையாட அனுமதிக்கும் ரொக்ஸ்டார்!

International 19 January 2026
மரணத்துடன் போராடும் ரசிகரின் கடைசி ஆசை: GTA 6-ஐ விளையாட அனுமதிக்கும் ரொக்ஸ்டார்!

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: பெப்ரவரி 8 இல் பொதுத்தேர்தல்!

International 19 January 2026
ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: பெப்ரவரி 8 இல் பொதுத்தேர்தல்!

ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் வரிப்போர் - ஐரோப்பிய ஒன்றியம் அவசர ஆலோசனை!

International 18 January 2026
ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் வரிப்போர் - ஐரோப்பிய ஒன்றியம் அவசர ஆலோசனை!

டிஷ்யூ காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்: நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

International 18 January 2026
டிஷ்யூ காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்: நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

காசா மறுகட்டமைப்புக்கு ‘சமாதான சபை’: டோனி பிளேயர், மார்கோ ரூபியோ நியமனம்!

International 18 January 2026
காசா மறுகட்டமைப்புக்கு ‘சமாதான சபை’: டோனி பிளேயர், மார்கோ ரூபியோ நியமனம்!

ஈரானில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டார் உச்ச தலைவர்! ட்ரம்ப்பே ‘குற்றவாளி’ எனச் சாடல்

International 17 January 2026
ஈரானில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டார் உச்ச தலைவர்! ட்ரம்ப்பே ‘குற்றவாளி’ எனச் சாடல்

40 ஆண்டுகால ஆட்சியைத் தக்கவைத்து 7 ஆவது தடவையாக முசெவேனி ஜனாதிபதியானார்

International 17 January 2026
40 ஆண்டுகால ஆட்சியைத் தக்கவைத்து 7 ஆவது தடவையாக முசெவேனி ஜனாதிபதியானார்

"வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே!"- விக்கிப்பீடியா பக்கத்தை பகிர்ந்து அதிரடி காட்டிய ட்ரம்ப்

International 12 January 2026
"வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே!"- விக்கிப்பீடியா பக்கத்தை பகிர்ந்து அதிரடி காட்டிய ட்ரம்ப்

வெனிசுவேலாவிலிருந்து "உடனடியாக" வெளியேறுங்கள்: அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

International 11 January 2026
வெனிசுவேலாவிலிருந்து "உடனடியாக" வெளியேறுங்கள்: அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடன் அட்டை வட்டி விகிதங்களுக்கு 10% உச்சவரம்பு: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

International 11 January 2026
கடன் அட்டை வட்டி விகிதங்களுக்கு 10% உச்சவரம்பு: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்: பாதுகாப்பு கோரி மின்னஞ்சல்

International 11 January 2026
சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்: பாதுகாப்பு கோரி மின்னஞ்சல்

அலெப்போ நகரை முழுமையாகக் கைப்பற்றியது சிரிய இராணுவம்

International 11 January 2026
அலெப்போ நகரை முழுமையாகக் கைப்பற்றியது சிரிய இராணுவம்
More News
General22 January 2026

கோடீஸ்வரர்களின் ஆட்சி: உலகளாவிய ஏழ்மைக்கு மத்தியில் உச்சம் தொட்ட பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு

உலகில் ஒருபுறம் பசியும் வறுமையும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதாக ஒக்ஸ்போம் சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.    2025 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 வீதம் உயர்ந்து, 18.3 டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.    இது கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி வளர்ச்சியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.    2020 ஆம் ஆண்டிலிருந்து கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 81 வீதம் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.    கடந்த ஒரே ஆண்டில் மட்டும் இவர்களின் சொத்து மதிப்பு 2.5 டிரில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.    இந்தத் தொகையைக் கொண்டு உலகில் நிலவும் கடும் வறுமையை 26 முறை ஒழிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    உலகில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 3,000 ஐத் தாண்டியுள்ளது.    ஈலோன் மஸ்க் உலகின் முதல் அரை டிரில்லியன் டொலர் சொத்து கொண்ட நபராக உருவெடுத்துள்ளார்.    சாதாரண மக்களை விட கோடீஸ்வரர்கள் அரசியல் பதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு 4,000 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    உலகளாவிய ஊடக நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் முன்னணி சமூக வலைதளங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.    ஈலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் போன்றோரை உதாரணமாகக் காட்டியுள்ள ஒக்ஸ்போம், இவர்கள் ஊடகங்கள் மூலம் பொதுக்கருத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்றுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.   ஊடகத்துறையில் உயர் பதவிகளில் இருப்பவர்களில் 27 வீதமானோரே பெண்கள் எனவும் சிறுபான்மையினர் அல்லது இன ரீதியாகப் பாதிக்கப்பட்ட பிரிவினர் 23 வீதம் மட்டுமே இருப்பதால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் நசுக்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.    ஒக்ஸ்போம் சர்வதேச நிறைவேற்று பணிப்பாளர் அமிதாப் பெஹார் கூறுகையில், பொருளாதார ரீதியாக ஏழையாக இருப்பது பசியை உருவாக்குகிறது, ஆனால் அரசியல் ரீதியாக ஏழையாக இருப்பது கோபத்தை உருவாக்குகிறது என எச்சரித்துள்ளார்.    இறுதியில் ஒக்ஸ்போம் பின்வரும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.    செல்வந்தர்களுக்கு வரி:    அதிகப்படியான சொத்து வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் சமத்துவமின்மையைக் குறைத்தல்.    அரசியல் பாதுகாப்பு:    அரசியலில் பெரும் பணக்காரர்களின் தலையீட்டைக் குறைக்க கடுமையான சட்டங்களைக் கொண்டு வருதல்.   ஊடக சுதந்திரம்:    ஊடகங்கள் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதைத் தடுத்து அதன் சுதந்திரத்தை உறுதி செய்தல்.    உலகின் சரிபாதி மக்கள் தொகையினரிடம் (4.1 பில்லியன் மக்கள்) உள்ள மொத்த சொத்துக்களுக்கு இணையான சொத்தை, வெறும் ஒரு சில கோடீஸ்வரர்கள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஈட்டியுள்ளனர் என்பது சமூக சமநிலைக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
கோடீஸ்வரர்களின் ஆட்சி: உலகளாவிய ஏழ்மைக்கு மத்தியில் உச்சம் தொட்ட பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு
General22 January 2026

வேறொரு அணி வெல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது - பெங்களூருவின் வெற்றி குறித்து மௌனம் கலைத்த தோனி

18 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, விராட் கோலியின் RCB அணி 2025 ஐபிஎல் கிண்ணத்தை உத்தியோகபூர்வமாகக் கைப்பற்றியது.    இந்த வரலாற்று வெற்றி குறித்து இதுவரை மௌனம் காத்து வந்த தோனி, தற்போது தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளி ஒன்றில், தோனி இவ்விடயம் குறித்து பேசியுள்ளார்.    அத்தோடு, "நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருக்கும் வரை, வேறு எந்த அணியாவது கிண்ணத்தை வெல்வதை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. இது ஒரு போட்டியாளராக எனக்குள் இருக்கும் இயல்பான குணம்."    இருப்பினும், RCB அணியின் இந்த வெற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அவர்கள் தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுக்கு எனது பெரிய வாழ்த்துக்கள்."    போட்டியில் பங்கேற்கும் போது நமது அணி வெற்றி பெற வேண்டும் என்றுதான் நாம் விரும்புவோம். அது எப்போதும் நமக்குச் சாதகமாக நடப்பதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மற்ற அணிகளிடமிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.    மேலும், "RCB ரசிகர்கள் மிகவும் அற்புதமானவர்கள். அணி பின்னடைவைச் சந்திக்கும் போது கூட, அவர்கள் மைதானத்திற்கு வந்து தங்கள் அணியை உற்சாகப்படுத்துவதை நிறுத்தவே இல்லை" என்று அவர் புகழாரம் சூட்டினார்.    2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில், ரஜத் படிதார் தலைமையிலான RCB அணி பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தோற்கடித்து தனது கன்னி வெற்றியைப் பதிவு செய்தது. 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று 5 முறை கிண்ணத்தை வென்ற மிக வெற்றிகரமான கப்டனான தோனி, 2026 ஐபிஎல் தொடரிலும் CSK அணிக்காக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
வேறொரு அணி வெல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது - பெங்களூருவின் வெற்றி குறித்து மௌனம் கலைத்த தோனி
General22 January 2026

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: தேரர்களின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஜனவரி 30 ஆம் திகதி

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.    திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இரு தேரர்களையும் விடுவிக்கக் கோரியும், அவர்களுக்கு வழங்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவை வலுவற்றதாக்கக் கோரியும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.    இந்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.    மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.    சம்பந்தப்பட்ட தரப்பினரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், இந்த மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அறிவிப்பதாக உத்தரவிட்டது.

விபரங்களுக்கு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: தேரர்களின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஜனவரி 30 ஆம் திகதி
General22 January 2026

கொழும்பு மாநகர சபையில் நடந்த ஊழல்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா?

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருகிறது.    2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயல்கள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை மீறல், அதிகாரம், அரசாங்க வளங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்காக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.    மேலும் சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கள், நியமனங்கள் மற்றும் கொள்முதல் வழிகாட்டல்களை மீறுதல், அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள், முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்கு நடவடிக்கைகள் மற்றும் இணக்கப்பாடுகள், மேற்கூறிய செயல்களால் அரசாங்கத்தின் சொத்துக்கள் அல்லது வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டங்கள் மற்றும் சேதங்கள் குறித்தும் தகவல்கள் திரட்டப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    குறித்த ஆணைக்குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையை மூன்று மாதங்களுக்குள்ளும், முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை ஆறு மாதங்களுக்குள்ளும் ஜனாதிபதி செயலாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளது.    இது தொடர்பான ஏதேனும் எழுத்துமூல முறைப்பாடுகள் அல்லது தகவல்களைச் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் ஆணைக்குழுவின் செயலாளருக்கு “இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.    அனைத்து முறைப்பாடுகளும் 2026 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.    அத்தகைய முறைப்பாடுகள் அல்லது தகவல்களை வழங்குபவர்களின் பெயர், முகவரி, தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் ஆகியவை அனைத்துச் சமர்ப்பிப்புகளிலும் குறிப்பிடப்பட வேண்டும்.    மேலும் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை எனின், அது தொடர்பில் ஆணைக் குழுவிடம் கோர முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.    ஆணைக்குழுவிடம் வாய்மூலச் சமர்ப்பிப்புகளைச் செய்ய விரும்பும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், 011 2 301 735 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் 2026 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
கொழும்பு மாநகர சபையில் நடந்த ஊழல்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா?
General22 January 2026

புதிய காசா திட்டம்: டாவோஸில் வெளியிடப்பட்ட 25 பில்லியன் டொலர் மதிப்பிலான மீள்கட்டமைப்பு வரைபடம்

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் அமைதிச் சபை நிகழ்வில், காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு பாரிய மற்றும் எதிர்கால நோக்குடைய திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதியின் மருமகன் ஜாரெட் குஷ்னர் வெளியிட்டுள்ளார்.    புதிய காசா என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து ஜாரெட் குஷ்னர் தனது உரையின் போது காசாவின் கடற்கரை ஓரத்தில் வானளாவிய கட்டிடங்களுடன் கூடிய ஒரு நவீன நகரத்தின் வரைபடத்தைக் காண்பித்தார்.    இத்திட்டத்தைச் செயல்படுத்த குறைந்தது 25 பில்லியன் டொலர் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.    முதற்கட்டமாக தெற்கு காசாவின் ரஃபா நகரை 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டியெழுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    காசாவிற்கான தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அலி ஷாத் தெரிவிக்கையில், அடுத்த வாரம் எகிப்துடனான ரஃபா எல்லைக் கடவை திறக்கப்படும் என அறிவித்தார்.    இது காசா மக்களுக்கான வாழ்வாதாரப் பாதை என வர்ணிக்கப்படுகிறது.    இருப்பினும், ஹமாஸ் வசமுள்ள பிணைக் கைதிகளின் உடல்களை மீட்கும் வரை எல்லை திறக்கப்படாது என இஸ்ரேல் தரப்பில் எதிர்ப்பு நிலவுகிறது.    காசாவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமானால், ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என குஷ்னர் நிபந்தனை விதித்துள்ளார்.    அத்துடன், காசாவில் ஒரே ஒரு சிவில் அதிகாரம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற 20 அம்ச அமைதித் திட்டத்தையும் அவர் முன்வைத்தார்.    இந்த அமைதிச் சபை கையெழுத்திடும் நிகழ்வில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் டாவோஸில் இருந்தபோதிலும், இந்த நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை.    காசா கமிட்டி தொடர்பாக வெள்ளை மாளிகைக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவும் முறுகல் நிலையே இதற்குப் பின்னணியாகக் கருதப்படுகிறது.

விபரங்களுக்கு
புதிய காசா திட்டம்: டாவோஸில் வெளியிடப்பட்ட 25 பில்லியன் டொலர் மதிப்பிலான மீள்கட்டமைப்பு வரைபடம்
International News

டியாகோ கார்சியா விவகாரம்: பிரித்தானியாவின் முடிவை 'முட்டாள்தனம்' எனச் சாடுகிறார் ட்ரம்ப்

International 20 January 2026
டியாகோ கார்சியா விவகாரம்: பிரித்தானியாவின் முடிவை 'முட்டாள்தனம்' எனச் சாடுகிறார் ட்ரம்ப்

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இடித்து அகற்றியது இஸ்ரேல்

International 20 January 2026
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இடித்து அகற்றியது இஸ்ரேல்

விபத்தால் விரிசலா? விரிசலால் விபத்தா? ஸ்பெய்ன் தொடருந்து விபத்தில் மர்மம்!

International 20 January 2026
விபத்தால் விரிசலா? விரிசலால் விபத்தா? ஸ்பெய்ன் தொடருந்து விபத்தில் மர்மம்!

மரணத்துடன் போராடும் ரசிகரின் கடைசி ஆசை: GTA 6-ஐ விளையாட அனுமதிக்கும் ரொக்ஸ்டார்!

International 19 January 2026
மரணத்துடன் போராடும் ரசிகரின் கடைசி ஆசை: GTA 6-ஐ விளையாட அனுமதிக்கும் ரொக்ஸ்டார்!

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: பெப்ரவரி 8 இல் பொதுத்தேர்தல்!

International 19 January 2026
ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: பெப்ரவரி 8 இல் பொதுத்தேர்தல்!

ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் வரிப்போர் - ஐரோப்பிய ஒன்றியம் அவசர ஆலோசனை!

International 18 January 2026
ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் வரிப்போர் - ஐரோப்பிய ஒன்றியம் அவசர ஆலோசனை!

டிஷ்யூ காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்: நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

International 18 January 2026
டிஷ்யூ காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்: நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

காசா மறுகட்டமைப்புக்கு ‘சமாதான சபை’: டோனி பிளேயர், மார்கோ ரூபியோ நியமனம்!

International 18 January 2026
காசா மறுகட்டமைப்புக்கு ‘சமாதான சபை’: டோனி பிளேயர், மார்கோ ரூபியோ நியமனம்!

ஈரானில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டார் உச்ச தலைவர்! ட்ரம்ப்பே ‘குற்றவாளி’ எனச் சாடல்

International 17 January 2026
ஈரானில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டார் உச்ச தலைவர்! ட்ரம்ப்பே ‘குற்றவாளி’ எனச் சாடல்

40 ஆண்டுகால ஆட்சியைத் தக்கவைத்து 7 ஆவது தடவையாக முசெவேனி ஜனாதிபதியானார்

International 17 January 2026
40 ஆண்டுகால ஆட்சியைத் தக்கவைத்து 7 ஆவது தடவையாக முசெவேனி ஜனாதிபதியானார்

"வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே!"- விக்கிப்பீடியா பக்கத்தை பகிர்ந்து அதிரடி காட்டிய ட்ரம்ப்

International 12 January 2026
"வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே!"- விக்கிப்பீடியா பக்கத்தை பகிர்ந்து அதிரடி காட்டிய ட்ரம்ப்

வெனிசுவேலாவிலிருந்து "உடனடியாக" வெளியேறுங்கள்: அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

International 11 January 2026
வெனிசுவேலாவிலிருந்து "உடனடியாக" வெளியேறுங்கள்: அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடன் அட்டை வட்டி விகிதங்களுக்கு 10% உச்சவரம்பு: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

International 11 January 2026
கடன் அட்டை வட்டி விகிதங்களுக்கு 10% உச்சவரம்பு: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்: பாதுகாப்பு கோரி மின்னஞ்சல்

International 11 January 2026
சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்: பாதுகாப்பு கோரி மின்னஞ்சல்

அலெப்போ நகரை முழுமையாகக் கைப்பற்றியது சிரிய இராணுவம்

International 11 January 2026
அலெப்போ நகரை முழுமையாகக் கைப்பற்றியது சிரிய இராணுவம்
Sports Stories
Explore More
பங்களாதேஷின் கோரிக்கை நிராகரிப்பு - ஐசிசி வைத்த 24 மணிநேர கெடு!

பங்களாதேஷின் கோரிக்கை நிராகரிப்பு - ஐசிசி வைத்த 24 மணிநேர கெடு!

2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண தொடரில், தனது நாட்டுப் போட்டிகளை இந்தியாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் பேரவை(ICC) திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.    இது குறித்து நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அவசரக் கூட்டத்தில் அனைத்து உறுப்பு நாடுகளும் கலந்துகொண்டன.    குறித்த கூட்டத்தில் பங்கேற்ற 12 உறுப்பினர்களில் 10 பேர் அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என வாக்களித்தனர்.    வெறும் இரண்டு பேர் மட்டுமே மாற்றத்திற்கு ஆதரவாக இருந்தனர்.    பெரும்பான்மை நாடுகளின் முடிவின்படி, பங்களாதேஷின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு 24 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.    இந்தநிலையில் இந்தியாவுக்கு பயணம் செய்து போட்டிகளில் விளையாடுவது குறித்து இறுதி முடிவை 24 மணிநேரத்திற்குள் அறிவிக்குமாறு பங்களாதேஷிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தரவிட்டுள்ளது.    ஒருவேளை பங்களாதேஷ் தனது பிடிவாதத்தை கைவிடாமல் இந்தியா செல்ல மறுத்தால், அந்த அணி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்படும்.    பங்களாதேஷ் அணி ஒருவேளை விலகினால் அல்லது நீக்கப்பட்டால், அந்த இடத்திற்கு ஸ்கொட்லாந்து (Scotland) அணியை விளையாட வைக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை திட்டமிட்டுள்ளது.    இதனால் உலகக் கிண்ண அட்டவணையில் எந்தப் பாதிப்பும் இருக்காது எனத் தெரிகின்றது.

விபரங்களுக்கு
கோலியை பின்தள்ளி முதலிடம் பிடித்தார் டேரில் மிட்செல்!

கோலியை பின்தள்ளி முதலிடம் பிடித்தார் டேரில் மிட்செல்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் (Daryl Mitchell) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.    இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் முறையே 131 மற்றும் 137 ஓட்டங்களைக் குவித்ததையடுத்து அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.    இதனையடுத்து கடந்த வாரம் ரோஹிட் சர்மாவை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்த விராட் கோலி, இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததால் தனது இடத்தை இழந்தார்.    தற்போது டேரில் மிட்செல் 845 புள்ளிகளுடன் முதலிடத்திலும், விராட் கோலி 795 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.    இதனைத் தொடரந்து ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சட்ரான் மூன்றாமிடத்திலும் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.    குறித்த தரவரிசைப்பட்டியலில் இலங்கை அணியின் சரித் அசலங்க 9ஆவது இடத்தில் உள்ளார்.    இதேவேளை பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷிட் கான் முதலிடத்தில் உள்ளதுடன், இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.    குறித்த தரவரிசையில் இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷன மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.    அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மதுல்லாஹ் ஓமர்சாய் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.    மேலும் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஹரி ப்ரூப் ஆகியோர் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளனர்.    இதனையடுத்து அவுஸ்திரேலிய அணியின் ட்ரெவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 3ஆம் மற்றும் நான்காம் இடங்களுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பற்றிக்கொண்ட உலகக் கிண்ண சர்ச்சை: பங்களாதேஷிற்கு பாகிஸ்தான் பகிரங்க ஆதரவு!

பற்றிக்கொண்ட உலகக் கிண்ண சர்ச்சை: பங்களாதேஷிற்கு பாகிஸ்தான் பகிரங்க ஆதரவு!

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் மறுத்து வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பங்களாதேஷின் பக்கம் நின்று சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ICC) கடிதம் எழுதியுள்ளது.    இன்று நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.    பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்ல மறுக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) நிலைப்பாட்டை ஆதரிப்பதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.    பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழலை சுட்டிக்காட்டி பங்களாதேஷின் கோரிக்கை நியாயமானது என பாகிஸ்தான் கூறியுள்ளது.    2027ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் மட்டுமே விளையாடும் என்ற ஒப்பந்தம் ஏற்கனவே உள்ள நிலையில், பங்களாதேஷிற்கும் அதுபோன்ற சலுகை வழங்கப்பட வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.    டி20 உலகக் கிண்ணம் பெப்ரவரி 7ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்களாதேஷ் பங்கேற்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.    பங்களாதேஷ் வர மறுத்தால், அவர்களுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியைச் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் பேரவை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    பங்களாதேஷ் ஏற்கனவே பாகிஸ்தானின் ஆதரவைக் கோரியிருந்த நிலையில், இப்போது பாகிஸ்தான் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் - இலங்கை குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் - இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.    இதில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.    இதன்படி சரித் அசலங்க தலைமையிலான குறித்த குழாமில் பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார,குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, பவன் ரத்நாயக்க, தனஞ்சய டி சில்வா, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ்,துனித் வெல்லாலகே,வனிந்து ஹசரங்க,ஜெப்ரி வான்டர்சே,மகேஷ் தீக்ஷன, மிலன் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ,பிரமோத் மதுஷான் மற்றும் ஈஷான் மலிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.    குறித்த 3 ஒருநாள் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (RPICS) நடைபெறவுள்ளன.    இதற்கமைய இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
வெளியேறுகிறதா பங்களாதேஷ்? - இன்று இறுதி முடிவு!

வெளியேறுகிறதா பங்களாதேஷ்? - இன்று இறுதி முடிவு!

2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் , சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.    இதன்படி இன்று ஜனவரி (21), பங்களாதேஷ் தனது இறுதி முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.    பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடுமா அல்லது விலகுமா என்பதை இன்றைய தினத்திற்குள் அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை கெடு விதித்துள்ளது.    ஒருவேளை பங்களாதேஷ் வர மறுத்தால், அவர்களுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியைத் தொடரில் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் பேரவை திட்டமிட்டுள்ளது.   இந்தநிலையில் பங்களாதேஷ் விளையாட்டுத்துறை ஆலோசகர் அசிப் நஸ்ருல், "இந்தியாவுக்கு அடிபணிந்து சர்வதேச கிரிக்கெட் பேரவை கொடுக்கும் நியாயமற்ற அழுத்தங்களை நாங்கள் ஏற்க மாட்டோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.    நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாக தனது அதிருப்தியைத் அவர் தெரிவித்தார்.    அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தபோது, சர்வதேச கிரிக்கெட் பேரவை அந்த இடங்களை மாற்றியது.   அதேபோன்ற ஒரு நியாயமான காரணத்திற்காகவே தாம் இப்போது இடமாற்றம் கேட்பதாக அசிப் நஸ்ருல் கூறியுள்ளார்.    மேலும் பங்களாதேஷ் அணியை நீக்கிவிட்டு ஸ்கொட்லாந்து அணியை சேர்க்கப்போவதாக தமக்கு எவ்வித அதிகாரப்பூர்வமான தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.    இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.    "இதைப் பற்றி பேசுவது பாதுகாப்பானது அல்ல (Not Safe)" என்று மட்டும் கூறி அவர் மழுப்பியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
ஐபிஎல் களத்தில் கூகுள் Gemini - 270 கோடிக்கு BCCIயுடன் ஒப்பந்தம்

ஐபிஎல் களத்தில் கூகுள் Gemini - 270 கோடிக்கு BCCIயுடன் ஒப்பந்தம்

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கு முன்னதாக, கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தளமான Gemini உடன் 270 கோடி ரூபாய் மதிப்பிலான அனுசரனையாளர்(sponsorship) ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) மேற்கொண்டுள்ளது.    இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.    கிரிக்கெட் உலகில் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், முன்னணி AI தளங்கள் இந்திய கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகின்றன.    தற்போது நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக்கில் (WPL) Gemini-ன் போட்டியாளரான ChatGPT ஏற்கனவே ஒரு அனுசரனையாளராக உள்ள நிலையில், இப்போது ஐபிஎல் தொடரில் Gemini இணைந்துள்ளது.    ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதிலும், கிரிக்கெட் வளர்ச்சியிலும் இத்தகைய AI நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.    2026 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் 26 முதல் மே 31 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பங்களாதேஷுக்கு ஆதரவாக பாகிஸ்தான் விலகப்போவதில்லை – வெளியான புதிய தகவல்!

பங்களாதேஷுக்கு ஆதரவாக பாகிஸ்தான் விலகப்போவதில்லை – வெளியான புதிய தகவல்!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவுக்குச் சென்று விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில், அதற்கு ஆதரவாகப் பாகிஸ்தான் போட்டிகளை புறக்கணிக்கப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவின் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாட்டு கிரிக்கெட் சபைகளுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி, இந்தியாவில் நடைபெறவுள்ள தமது உலகக் கிண்ணப் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் கோரிக்கை விடுத்துள்ளது.பங்களாதேஷின் இந்தக் கோரிக்கைக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் என்றும், போட்டி மாற்றப்படாவிட்டால் பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தைப் புறக்கணிக்கும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தகவல்கள் இதனை மறுத்துள்ளன."பாகிஸ்தான் போட்டிகளைப் புறக்கணிப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. ஏற்கனவே பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, போட்டியில் இருந்து விலகுவதற்குப் பாகிஸ்தானுக்கு எவ்விதக் காரணமும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.அதன்படி, ஜனவரி 21 ஆம் திகதிக்குள் (நாளை) இந்தியாவில் விளையாடுவது குறித்து பங்களாதேஷ் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும்.ஒருவேளை பங்களாதேஷ் விலகினால், தரவரிசை அடிப்படையில் ஸ்கொட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பங்களாதேஷின் பிடிவாதமான போக்கினால் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு ஆதரவு

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு ஆதரவு

இலங்கையின் பசுமை வலு சக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உறுதியளித்துள்ளது.    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான நேற்றைய சந்திப்பின் போது, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun) இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.    அத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு, இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    இலங்கையில் வலு சக்தி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதுடன், பசுமை வலு சக்தி, பசுமை போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் கூறியுள்ளார்.    இதனிடையே, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடனுதவியின் கீழ் இதுவரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
ஒவ்வொரு காதல் கதையும் சொல்லப்பட வேண்டியவை - குளோசப்பின் காதல் கதை புத்தகம்

ஒவ்வொரு காதல் கதையும் சொல்லப்பட வேண்டியவை - குளோசப்பின் காதல் கதை புத்தகம்

குளோசப் இலங்கையின் முதல் கூட்டமான காதல் கதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது.   குளோஸ்சப், இளமை, புத்துணர்ச்சி மற்றும் அச்சமற்ற நெருக்கம் ஆகியவற்றின் உணர்விற்காக நீண்டகாலமாகக் கொண்டாடப்படும் வர்தகநாமம். இலங்கையின் முதல் கூட்ட நெரிசலான காதல் கதை புத்தகமான பிரேக் தி பேரியரை பெருமையுடன் வெளியிடுகிறது. இந்த மைல்கல் படைப்பு வெறுமனே ஒரு புத்தகம் அல்ல, ஆனால் இளம் இதயங்களின் தைரியம், சொல்லப்படாத உணர்ச்சிகளின் அழகு மற்றும் எல்லைகளைக் கடக்கத் துணியும் அன்பின் காலமற்ற சக்தி ஆகியவற்றின் வாழ்க்கைச் சான்றாகும். இந்தப் பயணம் எளிமையான ஆனால் ஆழமான உணர்தலுடன் தொடங்கியது எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் காதல் கதைகளை அமைதியாகக் கைப்பற்றி, பயம் மற்றும் தயக்கத்தால் அடக்கி வைத்திருக்கிறார்கள். குளோசப் அந்தக் குரல்களை விடுவிக்க முற்பட்டது. ஒரு பிரசாரமாகத் தொடங்கிய விடயம், ஒரு இயக்கமாக மலர்ந்தது, பேச்சு மொழியின் வரம்புகளைத் தாண்டிய இரண்டு மாணவர்களான லாவன் மற்றும் ஃப்ரியின் மென்மையான கதையைத் தொடர்ந்து வந்த ஒரு குறும்படத்தில் உயிரூட்டப்பட்டது. அவர்களின் கதை நாட்டின் கற்பனையைக் கவர்ந்தது. மெட்டா மற்றும் டிக்டோக்கில் சில வாரங்களுக்குள் நாற்பத்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றது, இந்த செய்தி எவ்வளவு ஆழமாக எதிரொலிக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு கலாசார தருணம். அங்கிருந்து, தடைகளைத் தாண்டி, அச்சமின்றி அன்பை வெளிப்படுத்துவது குறித்த தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கையர்களை இந்த இயக்கம் அழைத்தது. பதில் அசாதாரணமாக இருந்தது நூற்றுக்கணக்கான கதைகள் இயற்கையானதாகவும் உண்மையாகவும், தைரியத்துடனும், பாதிப்புடனும் ஒளிர்ந்தன. வசந்த துக்கன்னரல, கெலும் ஸ்ரீமல் மற்றும் யேஷா பெர்னாண்டோ உள்ளிட்ட இலக்கியக் குரல்களின் புகழ்பெற்ற குழு, மிகவும் குறிப்பிடத்தக்க நூறு கதைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்தது. இந்தக் குரல்கள் இணைந்து, இலங்கை வரலாற்றில் முதல் கூட்ட நெரிசலான காதல் கதை புத்தகமான பிரேக் தி பேரியரை உருவாக்குகின்றன. அந்த புத்தகம் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வெளியிடப்பட்டது. யுனிலீவரின் தனிப்பட்ட பராமரிப்பு, அழகு மற்றும் நல்வாழ்வுக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷாமரா சில்வா கலந்து கொண்டார் 'குளோசப்பில், ஒவ்வொரு காதல் கதையும் கேட்கத் தகுதியானது என்று நாங்கள் நம்புகிறோம். மௌனத் தடை உண்மையானது, ஆனால் அந்தத் தடைகளை உடைக்க நம் இளைஞர்களுக்குள் இருக்கும் தைரியமும் அப்படித்தான். இந்த பிரசாரமும் இந்தப் புத்தகமும் அந்தத் துணிச்சலுக்கு ஒரு மௌனத்தைக் கலைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தத் துணிந்த அனைவருக்கும். இளைஞர்களுடனும், இதயத்தில் இளமையாக இருப்பவர்களுடனும் நிற்கும் வர்த்தகநாமமாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர்களுக்கு அந்த தருணத்தைக் கைப்பற்றி அவர்களின் இதயங்களுக்கு உண்மையாக இருக்க புதிய நம்பிக்கையை அளிக்கிறோம். யுனிலீவர் ஸ்ரீலங்கா லிமிடெட் டியோடரன்ட பிரிவுத் தலைவர் மிகார கீம்பியகே மேலும் கூறியதாவது, குளோசப் எப்போதும் வாய்வழி பராமரிப்புக்கு மேலாக நிற்கிறது.இளைஞர்களை அவர்களின் உண்மையாகவும் சுயமாகவும் இருக்க ஊக்குவிக்கவும்,அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் நாங்கள் இங்கு இருக்கிறோம். 'பிரேக் தி பேரியர்' என்பது வெறும் பிரசாரம் அல்ல இது எங்கள் இளைஞர்கள் அச்சமின்றி அன்பைத் தழுவ உதவும் ஒரு இயக்கம். எங்கள் முகவர் பங்காளிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் இடைவிடாத அர்ப்பணிப்பு இந்த பிரசாரத்தை ஒரு யதார்த்தமாக்கியது மற்றும் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான இதயங்களை அடைய எங்களுக்கு உதவியது. ஒன்றாக, நாம் தடைகளை உடைக்கும்போது, அன்பு, ஏற்றுக்கொள்ளல் மற்றும் உண்மையான இணைப்புக்கான இடத்தை உருவாக்குகிறோம் என்பதைக் காட்டியுள்ளோம். இந்தப் புத்தகம் ஒவ்வொரு காதல் கதையும் சொல்லப்பட வேண்டிய ஒன்று என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
வசூல் வேட்டை நடத்தும் பராசக்தி - 100 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிப்பு

வசூல் வேட்டை நடத்தும் பராசக்தி - 100 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிப்பு

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கூட்டணியில் வெளியான திரைப்படம் பராசக்தி.    குறித்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.    இந்தநிலையில் 'பராசக்தி' திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.    இதன்படி ‘பராசக்தி’ திரைப்படம், உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.    வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வந்த இத்திரைப்படம், ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியுள்ளது.    தொடர்ச்சியாக வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்து வரும் சிவகார்த்திகேயனுக்கு, இந்த திரைப்படத்தின் வெற்றியானது அவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.    குறிப்பாக, வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வசூல் வேட்டை இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விபரங்களுக்கு
‘ஜனநாயகன்’ திரைப்பட வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

‘ஜனநாயகன்’ திரைப்பட வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

நடிகர் விஜய் நடித்துள்ள அவரது இறுதித் திரைப்படம் என கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்குவது தொடர்பாகத் தணிக்கை சபை தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கில், சென்னை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.ஆரம்பத்தில், திரைப்பட தணிக்கை சபையின் ஆய்வுக் குழுவினர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, சில காட்சிகளை நீக்கினால் 'U/A' சான்றிதழ் வழங்கலாம் என ஒருமனதாகப் பரிந்துரைத்ததாகத் தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. தயாரிப்பு தரப்பும் அந்தக் காட்சிகளை நீக்கச் சம்மதித்தது. எனினும், சான்றிதழ் வழங்கும் இறுதி நேரத்தில், தணிக்கை சபை அந்தப் பரிந்துரையை ஏற்காமல் படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு (Revising Committee) அனுப்ப முடிவு செய்தது.மும்பையிலுள்ள தணிக்கை சபை தலைவருக்கு இந்த படத்தின் காட்சிகள் குறித்து ஏதோ ஒரு தரப்பிலிருந்து முறைப்பாடுகள் வந்ததாகத் தணிக்கை சபை நீதிமன்றத்தில் கூறியது. இந்தத் திடீர் முறைப்பாடுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள மர்மம் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறைப்பாட்டாளர் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க சபை மறுத்த நிலையில் சட்ட மோதல் தீவிரமானதுஇந்த திரைப்படம் ஒரு தீவிரமான அரசியல் கதைக்களத்தைக் கொண்டிருப்பதாகவும் படத்தின் சில வசனங்கள் அல்லது காட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராகவோ அல்லது சர்ச்சைக்குரிய வகையிலோ இருப்பதாகத் தணிக்கை சபை கருதியமையே இந்த இழுபறிக்குக் காரணம் எனத் தயாரிப்பு தரப்பு குற்றம் சாட்டுகிறது.திரைப்படத்தை ஜனவரி 9ஆம் திகதி வெளியிட்ட திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் 500 கோடி இந்திய ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி நேரத்தில் தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது படத்தை முடக்கும் முயற்சி எனத் தயாரிப்பாளர் தரப்பு கருதியது.இதனையடுத்து. தணிக்கை சபையின் இழுபறியை எதிர்த்துத் தயாரிப்பாளர் தரப்பு சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகினர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்திற்கு உடனே 'U/A'சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.இதை எதிர்த்துத் தணிக்கை சபை மேல்முறையீடு செய்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதிகள் ஆயம் தடை விதித்தது.இந்தநிலையில, தயாரிப்பு நிறுவனம் இந்திய உயர்நீதிமன்றில் இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்தது. அதன்படி, உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஜனவரி 20 ஆம் திகதிக்குள் (இன்று) விசாரித்து முடிக்குமாறு சென்னை மேல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.இதன் விளைவாகவே இன்று இறுதி வாதங்கள் நடைபெற்று, தற்போது தீர்ப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள 'பிரக்ருதி' என்ற யானையை தத்தெடுத்துள்ளார்.    இதன்படி, அடுத்த 6 மாதங்களுக்கு அந்த யானைக்கான உணவு மற்றும் பராமரிப்புச் செலவுகளை அவரே ஏற்றுக்கொள்வார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.    ஏற்கனவே கடந்த ஆண்டு இதே பூங்காவிலிருந்து ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை அவர் தத்தெடுத்திருந்தார்.    தற்போது அவர் நடித்த 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
ரூ.84 கோடி இழப்பீடு கோரி தனுஷின் 'தேரே இஷ்க் மே' படத்திற்கு எதிராக வழக்கு!

ரூ.84 கோடி இழப்பீடு கோரி தனுஷின் 'தேரே இஷ்க் மே' படத்திற்கு எதிராக வழக்கு!

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' திரைப்படம், தனுஷின் முன்னைய வெற்றிப் படமான 'ராஞ்சனா'வின் சாயலில் இருப்பதாகக் கூறி ஈராஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.'ராஞ்சனா' படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் தன்மைகள் அப்படியே 'தேரே இஷ்க் மே' படத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.'ராஞ்சனா' படத்தின் நல்லெண்ணத்தைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் நோக்கில், அதன் வர்த்தக முத்திரை தலைப்பு, அடையாள வாசகம் மற்றும் காட்சிக் கூறுகளை இந்தப் புதிய படத்தில் வேண்டுமென்றே பயன்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.படத்தின் முன்னோட்டம் மற்றும் விளம்பரங்களில் எவ்வித அனுமதியும் இன்றி 'ராஞ்சனா' படம் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.தங்கள் வாதத்திற்கு ஆதாரமாகப் படத்தின் சுவரொட்டிகள், முன்னோட்டம் மற்றும் நேர்காணல் காணொளிகளை ஈராஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த உரிமை மீறல்களுக்காக 84 கோடி இந்திய ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கோரியுள்ளது.இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
ஜனநாயகனுக்கு என்ன முடிவு - நாளை முக்கிய தீர்ப்பு!

ஜனநாயகனுக்கு என்ன முடிவு - நாளை முக்கிய தீர்ப்பு!

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (20) விசாரணைக்கு வருகின்றது.    முன்னதாக இந்தத் திரைப்படத்திற்கு 'யு/ஏ' (U/A) சான்றிதழ் வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.    இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை சபை (Censor Board) தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.    இதனையடுத்து தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்ஸவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.    இந்தநிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு மற்றும் தணிக்கை சான்றிதழ் குறித்த இறுதி முடிவை இந்த விசாரணை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விபரங்களுக்கு
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தெறி

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தெறி

அட்லி இயக்கத்தில் விஜய்யின் கூட்டணியில் வெளியான திரைப்படம் தெறி.   இந்த திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதி மறு வெளியீடு செய்யப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். இதனையொட்டி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.   இதனையடுத்து, தெறி படத்தின் வெளியீட்டு திகதியை ஒத்திவைக்க வேண்டும் என்று கலைப்புலி எஸ். தாணுவிற்கு திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்தார்.   இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வெளியாகவிருக்கும் 'தெறி' திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு கலைப்புலி எஸ். தாணுவிடம் வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.   இந்த பதிவை பகிர்ந்த கலைப்புலி எஸ். தாணு, "புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி" என்று தெரிவித்தார்.   இந்தநிலையில், தெறி படத்தின் வெளியீட்டு திகதி தயாரிப்பாளர் தாணு ஒத்தி வைத்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.   இதனை தொடர்ந்து திரெளபதி 2 திரைப்பட குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக படக்குழு அறிவித்துள்ளது.

விபரங்களுக்கு
இப்படியொரு வெறுப்பு நிறைந்த மனிதரை பார்த்ததே இல்லை: ஏ.ஆர்.ரகுமானை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்

இப்படியொரு வெறுப்பு நிறைந்த மனிதரை பார்த்ததே இல்லை: ஏ.ஆர்.ரகுமானை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்

பொலிவூட் திரையுலகில் சமூக ரீதியான காரணங்களால் தனக்கு வாய்ப்பு குறைக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குற்றஞ்சாட்டிய நிலையில், நடிகை கங்கனா ரணாவத் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.    விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான chawa திரைப்படம், பிரிவினையை உண்டாக்கும் திரைப்படம் என்று அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் கூறியிருந்தார்.    பொலிவூட் திரையுலகில் சமூக ரீதியான காரணங்களால் தனக்கு வாய்ப்புகள் குறைக்கப்படுகிறதோ என்று சந்தேகிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.    ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்துக்கள் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தனது எமர்ஜென்சி படத்திற்கு இசையமைக்க ரகுமான் மறுத்துவிட்டதாக கங்கனா குற்றஞ்சாட்டியுள்ளார்.    தாம் ஒரு கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் முன்முடிவோடு பல பாரபட்சங்களை எதிர்கொள்வதாகவும் ஏ.ஆர்.ரகுமான் போன்று பாரபட்சம் பார்க்கும், வெறுப்பு நிறைந்த ஒரு மனிதரை பார்த்ததே இல்லை என்றும் கங்கனா கூறியுள்ளார்.    தாம் இயக்கி நடித்த எமர்ஜென்சி படத்தின் கதையை ஏ.ஆர்.ரகுமானிடம் கூற ஆசைப்பட்டதாகவும், ஆனால், தன்னை சந்திக்கக்கூட அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.    ராகுல்காந்தியே தனது படத்தை பாராட்டிய போதும், ரகுமானின் கண்ணை மட்டும் வெறுப்பு மறைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

விபரங்களுக்கு
திரையரங்குகளை ஆக்கிரமிக்கப் போகும் 'மங்காத்தா' & 'தெறி'… யாருடைய கை ஓங்கும்?

திரையரங்குகளை ஆக்கிரமிக்கப் போகும் 'மங்காத்தா' & 'தெறி'… யாருடைய கை ஓங்கும்?

விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களின் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் மோதுவதால் தமிழ் திரையுலகம் ஒரு பரபரப்பான சூழலுக்குத் தயாராகி வருகிறது.    'தெறி' மற்றும் 'மங்காத்தா' ஆகிய படங்களின் மறுவெளியீடு அவர்களின் இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.    விஜய்யின் வரவிருக்கும் திரைப்படமான 'ஜன நாயகன்' சட்ட மற்றும் தணிக்கை சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில், ஜனவரி 23 ஆம் திகதி இரசிகர்களுக்கு ஒரு முக்கிய நாளாக மாறியுள்ளது.    'தெறி' மறுவெளியீடு உறுதி    அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் 2016 இல் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான 'தெறி', வரும் ஜனவரி 23, 2026 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.    முதலில் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகவிருந்த விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம், மத்திய திரைப்பட தணிக்கை சபையின் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் பிற்போடப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.    தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இது குறித்துக் கூறுகையில், முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15 அன்று 'தெறி' படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டதாகத் தெரிவித்தார்.    இருப்பினும், மற்ற பொங்கல் படங்களின் வசூல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஏனைய தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வெளியீட்டுத் திகதி ஜனவரி 23 ஆக மாற்றப்பட்டது.    அஜித்தின் 'மங்காத்தா'    'தெறி' படத்தின் இந்த மறுவெளியீடு, அஜித்தின் 'மங்காத்தா' படத்துடன் நேரடியாக மோதவுள்ளது.    வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 இல் வெளியான 'மங்காத்தா' ஒரு கல்ட் கிளாசிக் படமாகும்.    இதில் அஜித் விநாயக் மகாதேவ் என்ற வேடத்தில் நடித்திருந்தார். திரிஷா, அர்ஜுன் சர்ஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர்.    இருபடங்களும் மறுவெளியீடாக இருந்தாலும், திரையரங்கு உரிமையாளர்கள் அதிக அளவிலான கூட்டத்தையும் வசூலையும் எதிர்பார்க்கின்றனர்.   source:- Indian Media 

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////