கொழும்பு புறநகர் திட்டத்தின் (Colombo Suburban Railway Project) கீழ், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மின்சார தொடருந்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையே இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அதன்படி, தற்போதுள்ள தொடருந்து சேவைக்கு இணையாக இந்த மின்சார தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும்.
இந்த தொடருந்து சேவை முதற்கட்டமாக களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் மருதானையிலிருந்து மாகும்புர வரையும், பிரதான மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம வரையிலும் கரையோர மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரையிலும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதுள்ள அகலமான தண்டவாளப் பாதைகளுக்கு (Broad Gauge) பதிலாக, சர்வதேசத் தரத்திலான நியமப் பாதைகளாக (Standard Gauge) தொடருந்து தண்டவாளங்களை புனரமைப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் போது எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளை 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தகலந்துரையாடலில் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடைய விடயங்கள் சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையே இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அதன்படி, தற்போதுள்ள தொடருந்து சேவைக்கு இணையாக இந்த மின்சார தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும்.
இந்த தொடருந்து சேவை முதற்கட்டமாக களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் மருதானையிலிருந்து மாகும்புர வரையும், பிரதான மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம வரையிலும் கரையோர மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரையிலும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதுள்ள அகலமான தண்டவாளப் பாதைகளுக்கு (Broad Gauge) பதிலாக, சர்வதேசத் தரத்திலான நியமப் பாதைகளாக (Standard Gauge) தொடருந்து தண்டவாளங்களை புனரமைப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் போது எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளை 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தகலந்துரையாடலில் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடைய விடயங்கள் சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Latest News
பிரபல இசையமைப்பாளர் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு: பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பகிரங்க முறைப்பாடு
Local
29 April 2026
லண்டனில் இரு யூதர்கள் மீது கத்திக்குத்து: பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தீவிர விசாரணை
Local
29 April 2026
தொடரும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள்
Local
29 April 2026
தமிழக சட்டசபைத் தேர்தல்- தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Local
29 April 2026
திறைசேரி செயலாளர் நாளை நிதி பற்றிய குழுவிற்கு வர மாட்டார் !
Local
29 April 2026
150 பில்லியன் டொலர் இழப்பீடு! OpenAI-ஐ மீண்டும் தொண்டு நிறுவனமாக மாற்ற ஈலோன் மஸ்க் முயற்சி!
Local
29 April 2026
மீண்டும் வராரு ரான்சோ! – '3 Idiots' இரண்டாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார் அமீர் கான்
Local
29 April 2026
ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க ரோபோக்களை களமிறக்கும் ஜப்பான் ஏர்லைன்ஸ்!
Local
29 April 2026
இளைஞர்களைத் தாக்கும் புற்றுநோய் - அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்!
Local
29 April 2026
நாளை முதல் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்
Local
29 April 2026