General29 April 2026

நூற்றாண்டு விழாவில் கௌரவிக்கப்பட்ட சச்சின்: சிலையைப் பெறுவதற்கு முன் காலணிகளைக் கழற்றி மரியாதை!

ஆந்திரா பல்கலைக்கழகத்தின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கருக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 'வெங்கடாஜலபதி' சிலையை வழங்கி கௌரவித்தார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தனக்கு வழங்கப்பட்ட இறைவனின் சிலையை வாங்குவதற்கு முன்பாக, சச்சின் தனது காலணிகளைக் கழற்றிவிட்டு, மிகவும் பக்திப் பெருக்குடன் குனிந்து மரியாதை செய்தார்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று உலக ரசிகர்களால் போற்றப்பட்டாலும், தனது கலாசாரம் மற்றும் ஆன்மீக விழுமியங்கள் மீதான அவரது இந்த மதிப்பும், எளிமையும் தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்த சச்சின், இன்றும் தனது பண்பான நடத்தையின் மூலம் இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்பதை இந்த நிகழ்வுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

இதையும் பார்க்க..


Related recommendation
Hiru TV News | Programmes