அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து 400 தோள்பட்டையில் வைத்து இயக்கும் குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட ஏவுகணைகள் அடுத்த சில வாரங்களில் ஈரானைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா தயாரிப்பான QW-12 மற்றும் FN-16 ரக ஏவுகணைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கு வழங்கப்படவுள்ளதுடன், ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட இடைத்தரகு நிறுவனம் மூலமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவை குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை இலக்கு வைத்துத் தாக்கும் திறன் கொண்டவை என்பதுடன், எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தகவல்களைச் சீன வெளியுறவு அமைச்சு முற்றுமுழுதாக மறுத்துள்ளதுடன், இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அமைதியை ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த ஏவுகணைகள் சீனாவிலிருந்து பாகிஸ்தான் வழியே ஈரானுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளைப் பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR திட்டவட்டமாக மறுத்து, அவை பொய் பிரசாரம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, தனது வான் பாதுகாப்பை விரைவாக மறுசீரமைக்க ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட ஏவுகணைகள் அடுத்த சில வாரங்களில் ஈரானைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா தயாரிப்பான QW-12 மற்றும் FN-16 ரக ஏவுகணைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கு வழங்கப்படவுள்ளதுடன், ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட இடைத்தரகு நிறுவனம் மூலமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவை குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை இலக்கு வைத்துத் தாக்கும் திறன் கொண்டவை என்பதுடன், எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தகவல்களைச் சீன வெளியுறவு அமைச்சு முற்றுமுழுதாக மறுத்துள்ளதுடன், இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அமைதியை ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த ஏவுகணைகள் சீனாவிலிருந்து பாகிஸ்தான் வழியே ஈரானுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளைப் பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR திட்டவட்டமாக மறுத்து, அவை பொய் பிரசாரம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, தனது வான் பாதுகாப்பை விரைவாக மறுசீரமைக்க ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
Latest News
மிரிஸ்ஸவில் துப்பாக்கிச்சூடு: கடற்றொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
31 July 2026
இலங்கையில் மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு !
Local
31 July 2026
ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் பேரீச்சம்பழ அறுவடை: ஊர் மக்கள் நெகிழ்ச்சி!
Local
31 July 2026
பாகிஸ்தானில் பனிச்சரிவு: காணாமல் போன மலையேற்ற வீரர்களில் நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு!
Local
31 July 2026
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை
Local
31 July 2026
ரத்மலானை கந்தாவல வீதி மற்றும் வடிகால் அமைப்பை உடனடியாக புனரமைக்க பிரதமர் உத்தரவு !
Local
31 July 2026
"30 வருஷமா முயற்சித்தும் முடியவில்லை..." பிரதமர் மோடியிடம் சுந்தர் சி பற்றி குஷ்பு சொன்ன சுவாரஸ்ய உண்மை!
Local
31 July 2026
மொரோக்கோ - ஸ்பெயின் எல்லையில் பரபரப்பு! ஒரே நாளில் 49,000 புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவல்
Local
31 July 2026
கிராமி விருதுகளைப் புறக்கணிக்க BTS முடிவா? பரபரப்பை ஏற்படுத்திய கே-பாப் குழு!
Local
31 July 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை
Local
31 July 2026