General02 August 2026

காலி சிறைச்சாலையிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்!

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (2) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அம்பலாங்கொடை, குலீகொட, கலகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

வீடு உடைப்பு மற்றும் திருட்டுச் குற்றச்சாட்டுகளின் கீழ் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகள் தொடர்பாக இவர் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்துள்ளார்.

இன்று காலை, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பட்டியலைச் சரிபார்த்தபோதே, இந்த நபர் சிறைச்சாலையின் பாதுகாப்புச் மதிலில் ஏறித் தப்பிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர் இதற்கு முன்னரும் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, மதில் மீதேறி தப்பிச் சென்றவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காக பல காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes