அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், சுமார் 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நூற்றுக் கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
ஸ்போகேன் நகரத்தைச் சுற்றி மூன்று பெரிய காட்டுத்தீ கட்டுப்பாடற்ற முறையில் தொடர்ந்து எரிந்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
"எமது பிராந்தியம் சந்தித்துள்ள மிக மோசமான இயற்கை பேரழிவு இது" என ஸ்போகேன் மேயர் லிசா பிரவுன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வொஷிங்டன் மாநில ஆளுநர் பாப் பெர்குசன் மாநிலம் முழுவதும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கூட்டாட்சி உதவியைக் கேட்டுள்ளதாக மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதுவரை வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட சுமார் 600 கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
மேலும் 10,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சார இணைப்பை இழந்துள்ளனர்.
பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாகத் தீ வேகமாகப் பரவி வருகின்றது.
இதுவரை உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ உறுதி செய்யப்படாத போதிலும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், வெளியேறுமாறு அறிவுறுத்தப்படும் போது உடனடியாக ஒத்துழைக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Latest News
சீரற்ற வானிலை: தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு காவல்துறை குவிப்பு : கைது செய்ய வந்ததாக தகவல்
Local
04 August 2026
மெர்வின் சில்வாவின் வழக்குடன் நான் தொடர்புபடவில்லை! - அப்போது நான் பாடசாலை மாணவி: பிரபல நடிகை பகிரங்க அறிக்கை
Local
04 August 2026
ஈரானின் நிலைப்பாடு இரட்டை வேடம்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு
Local
04 August 2026
அப்பிள் அப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் திடீர் மாயம் – காரணம் என்ன?
Local
04 August 2026
பலத்த காற்று: கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தவெக சார்பில் இன்று போராட்டம்
Local
04 August 2026
கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
Local
04 August 2026
அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; ஒருவர் காணாமல்போயுள்ளார்
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு - அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026