இலங்கையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது பலத்த கவலையை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சர்வதேச நீதிபதிகள் அமைப்பான சர்வதேச நீதிபதிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது பற்றிய கவலையை விட, இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்ட விதம், நேரம் மற்றும் இதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தே கவலை கொள்வதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நீதித்துறையைப் பாதிக்கும் அரசியலமைப்பு மாற்றங்கள், முறையான ஆலோசனைகள் மற்றும் வெளிப்படையான வழிமுறைகள் மூலமே கொண்டுவரப்பட வேண்டும்.
தன்னிச்சையாக கொண்டுவரப்படும் இத்தகைய அறிவிப்புகள் நீதித்துறை சுயாதீனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தச் சட்டம் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்குப் பலன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவே பரவலாகப் பார்க்கப்படுவதாகவும், இது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்றும் சர்வதேச நீதிபதிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை நீதித்துறை சேவை சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய அமைப்புகளின் கவலைகளையும் தாம் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நீதிபதிகள் சங்கம், இந்தச் சட்டமூலத்தை தற்போதைய வடிவில் மீளாய்வு செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
1953-இல் ஒஸ்திரியாவில் தொடங்கப்பட்ட சர்வதேச நீதிபதிகள் சங்கம், 93 நாடுகளின் நீதிபதிகள் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி சர்வதேச அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
மக்கள் பிரதிநிதிகளின்சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டத் திருத்தம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
Local
06 August 2026
சைபர் பாதுகாப்பு சோதனையில் அதிர்ச்சி: AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் என்ன நடக்கும்? மெட்டா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
06 August 2026
சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
Local
06 August 2026
இலங்கை தேயிலைக்கு பலத்த வரவேற்பு - ஜூலை ஏலத்தில் விலை அதிரடியாக அதிகரிப்பு
Local
06 August 2026
தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி : இன்று மீண்டும் அதிகரித்தது தங்க விலை!
Local
06 August 2026
பல்கலைக்கழக சேர்க்கைக்கான பதிவுகள் ஆரம்பம் - மேன்முறையீடுகளுக்கு ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை அவகாசம்
Local
06 August 2026
திருகோணமலையில் குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Local
06 August 2026
குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!
Local
06 August 2026
நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்களின் படகு விபத்து - மீட்பு நடவடிக்கையில் கடற்படை
Local
06 August 2026
தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!
Local
06 August 2026