தணமல்வில, தெமோதர வௌ பகுதியில் உள்ள கஞ்சா தோட்டமொன்றை முற்றுகையிட்டு, அதன் உரிமையாளரிடம் 5 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்ததாகக் கூறப்படும் மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 4 காவல்துறை அதிகாரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி குறித்த கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட 6 பேர் கொண்ட காவல்துறை குழு, கஞ்சா பயிர்களில் ஒரு சிறு பகுதியை மாத்திரம் அழித்துவிட்டு, எஞ்சிய கஞ்சா பயிர்களை எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை உலர்த்துவதற்காக ‘களு’ என அழைக்கப்படும் நபரிடம் ஒப்படைத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி தணமல்வில தலைமையக காவல்துறை பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கஞ்சா தோட்ட உரிமையாளரும், அரச புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கஞ்சாவை உலர்த்தியதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நீதிமன்ற தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர், இரண்டு காவல்துறை சார்ஜன்ட்கள், ஒரு சாரதி மற்றும் ஒரு காவல்துறை கொன்ஸ்டபிள் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்
Latest News
பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து: தொடரிலும் முன்னிலை
Local
22 August 2026
'தி சைக்கிள் ஒஃப் லவ்'- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா
Local
22 August 2026
மூடப்பட்ட குடியேற்றத் தி;ட்டத்தை திறந்த இஸ்ரேல்: உச்சக்கட்ட பதற்றத்தில் பாலஸ்தீனர்கள்;
Local
22 August 2026
மருத்துவ பரிசோதனையின் பின்னர் இம்ரான் கான், மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்
Local
22 August 2026
வீரர்-வீராங்கனைகளுக்கு வெப்பத்துக்கு எதிரான பாதுகாப்பை வலியுறுத்தும் தென்கொரியா
Local
22 August 2026
உலக கிண்ணத்தில் இடம்பெற்ற அத்துமீறல்கள்: ஆர்ஜன்டீனாவுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அபராதம்
Local
22 August 2026
ஸ்வீடன் பாடசாலை ஒன்றில் வாள் தாக்குதல்: பலர் காயம்
Local
22 August 2026
யுக்ரைன்- ரஷ்ய போர்: அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்புகள்
Local
22 August 2026
பாலஸ்தீன எக்சன் அமைப்பினர் பயங்கரவாதிகள் அல்லர்: தீர்ப்பு வெளியானது
Local
22 August 2026
டெய்லி மெயில் நிறுவனத்திற்கு 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளைச் செலுத்த இளவரசர் ஹரிக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
21 August 2026