தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நாஞ்சில் சம்பத் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள முகப்பேரில் பிரபல தனியார் ஊடகம் சார்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார்.
இந்த விவாத நிகழ்ச்சியின்போது, அவர் திராவிட முன்னேற்றக்கழகத்தினரை கடுமையாக விமர்சித்து பேசியதுடன்,சில கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திராவிட முன்னேற்றக்கழகத்தினருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கூட்டத்திலிருந்த ஒருவர் நாஞ்சில் சம்பத்தை நோக்கி நாற்காலியை வீசியுள்ளார். அது அவர் மீது பட்டதால் அங்கு திடீர் பரபரப்பும் மோதல் சூழலும் உருவாகியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விவாத நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பாதுகாப்புக்குப் பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் ராஜீவ் காந்தி போன்றோர் தொண்டர்களைச் சமாதானப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Latest News
லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் கல்விப் புலமைப்பரிசில் திட்டம்!
Local
22 August 2026
Comeback கொடுப்பதில் நாம் Specialist : ஸ்டாலின் தெரிவிப்பு
Local
22 August 2026
54 வயதில் இரண்டாவது திருமணம் – 39 வயது காதலியை கரம் பிடித்த பிரபல பொலிவுட் நடிகர்
Local
22 August 2026
இலங்கை கடற்பரப்பில் மீன்வளம் சரிவு: நாரா அமைப்பு எச்சரிக்கை!
Local
22 August 2026
யாழில் வாணவேடிக்கையை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்!
Local
22 August 2026
‘வருங்கால முதலமைச்சர்’ – சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனால் பரபரப்பு
Local
22 August 2026
களத்தில் இறங்கிய ஜனாதிபதி: எல்நினோ பாதிப்பை எதிர்கொள்ள அதிரடி திட்டங்கள்!
Local
22 August 2026
"என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் அம்மாதான்" – ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி
Local
22 August 2026
மறைந்த பாடகி நந்தா மாலினிக்கு ஜனாதிபதி அஞ்சலி
Local
22 August 2026
கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்று: அமெரிக்காவில் ஆரம்பம்!
Local
22 August 2026