International21 August 2026

விஜய்- திரிஷா விடயம்: நடிகை சஞ்சனா கல்ராணியின் அதிரடி கருத்து!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இடையேயான விவகாரம் மற்றும் சுதந்திர தின விழா நிகழ்வுகள் குறித்து நடிகை சஞ்சனா கல்ராணி அளித்த நேர்காணல் அதிகமாக இணையங்களில் பகிரப்படுகிறது.

விஜய்யின் நிர்வாகத் திறமையைக் குறை கூற முடியாததால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் பெண்களையும் குறிவைத்து விமர்சிப்பது முறையல்ல என்று சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.

திரிஷா ஒரு வெற்றிகரமான நடிகை என்றும், யாராக இருந்தாலும் பெண்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் உறவு, அவர்களின் தனிப்பட்ட விரும்பமாகும் என்றும் சஞ்சனா கல்ராணி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை என்றும், ஊடகங்களில் பலரும் அவரது எதிர்காலம் குறித்துப் பேசி வருவதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes