இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பாடசாலை அதிபர் ஒருவர் 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி , கடந்த 12ஆம் திகதி தனது இல்லத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருட்டு நோக்கில் மாணவர் இருவரும் குறித்த அதிபரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். எனினும், அதிபர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதைத் தொடர்ந்து, அவரை 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர் .
இதற்கு முன்னர், மாணவர்களின் பைகளில் பணமும் கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிபர் அவர்களை எச்சரித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து கோவாவுக்குத் தப்பிச் சென்ற மாணவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் 154,000 ரூபாய் பணமும், திருடப்பட்ட பணத்தில் வாங்கியதாகக் கூறப்படும் ஐபோன் மற்றும் அதிபரின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மாணவர்கள் குறுகிய காலத்தில் எளிதாகப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பது குறித்த தகவல்களை இணையத்தில் தேடியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி , கடந்த 12ஆம் திகதி தனது இல்லத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருட்டு நோக்கில் மாணவர் இருவரும் குறித்த அதிபரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். எனினும், அதிபர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதைத் தொடர்ந்து, அவரை 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர் .
இதற்கு முன்னர், மாணவர்களின் பைகளில் பணமும் கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிபர் அவர்களை எச்சரித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து கோவாவுக்குத் தப்பிச் சென்ற மாணவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் 154,000 ரூபாய் பணமும், திருடப்பட்ட பணத்தில் வாங்கியதாகக் கூறப்படும் ஐபோன் மற்றும் அதிபரின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மாணவர்கள் குறுகிய காலத்தில் எளிதாகப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பது குறித்த தகவல்களை இணையத்தில் தேடியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Latest News
கபொத உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம் - ஆண்டின் இறுதிக்குள் பெறுபேறுகளை வெளியிடத் திட்டம்
Local
06 September 2026
அங்கீகரிக்கப்படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
Local
06 September 2026
அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி - ஹோர்முஸ் நீரிணையில் 3 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல்
Local
06 September 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை : பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!
Local
06 September 2026
ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்!
Local
06 September 2026
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!
Local
06 September 2026
டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் செம்பியன் பட்டம் வென்று ருமேஷ் தரங்க வரலாற்று சாதனை!
Local
06 September 2026
மெஸ்ஸியின் 10ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வு இல்லை ஆர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனம் அதிரடி முடிவு!
Local
06 September 2026
தர்ப்பைப் புல்லால் இறுதிச் சடங்கு! வெள்ளத்தின் பின் பரிதவிக்கும் உறவினர்கள்!
Local
06 September 2026
அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை! ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!
Local
06 September 2026