International29 August 2026

காஸாவில் அமைதியை வழிகாட்டலை மீறினால், போர்நிறுத்தம் முற்றிலுமாகச் சிதைந்துவிடும் என்று எச்சரிக்கை

காஸாவில் அமைதிக்கான வழிகாட்டு வரைபடத்தை (roadmap for peace) இரு தரப்பினரும் பின்பற்றத் தவறினால் அங்கு போர்நிறுத்தம் முற்றிலுமாகச் சிதைந்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காஸா அமைதிக்கான சபையின் உயர் பிரதிநிதி நிக்கோலாய் ம்லாதெனோவ் (Nikolay Mladenov) இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய திட்டத்திற்கு "சிறந்த மாற்று வழி எதுவுமில்லை" என்று குறிப்பிட்ட அவர், "மீண்டும் போர் தொடங்குவது பேரழிவை ஏற்படுத்தும்" என்றும் எச்சரித்துள்ளார்.

காஸாவில் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு மத்தியில், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரையும் எச்சரிக்கும் வகையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காஸா முனையில் சர்வதேச உறுதிப்படுத்தும் படையை (ISF) நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளை அமைதிக்கான சபை நிர்ணயித்துள்ளது.

இதில் மொராக்கோ பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளது, இருப்பினும் துருக்கியின் பங்கேற்பை இஸ்ரேல் எதிர்த்ததால் அந்த நாடு இதில் இடம்பெறவில்லை.

காஸாவின் புனரமைப்பிற்காக 7 பில்லியன் டாலர் நிதியுதவி உறுதியளிக்கப்பட்டுள்ளதாக நிக்கோலாய் ம்லாதெனோவ் தெரிவித்தார்.

இந்தநிலையில் காஸாவில் அன்றாட குடிமை விவகாரங்களை நிர்வகிக்கவும், உள்ளூர் புனரமைப்பை ஒருங்கிணைக்கவும் ஒரு பாலஸ்தீனிய தேசியக் குழு (National Committee for the Administration of Gaza) விரைவில் பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை நிக்கோலாய் ம்லாதெனோவ் முன்மொழிந்த 15 அம்ச வழிகாட்டு வரைபடத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது
எனினும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்ஹாகு இந்தத் திட்டத்தை வெளிப்படையாக நிராகரித்துள்ளார்.

இதனால் இந்த திட்டத்தின் எதிர்காலம் தற்போதைக்கு நிச்சயமற்ற நிலையிலேயே உள்ள
Related recommendation
Hiru TV News | Programmes