International13 September 2026

மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலா AI? உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளின் அபிவிருத்தி வேகத்தைக் குறைத்து, அவைகளைத் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என முன்னணி AI நிறுவனமான Anthropic-இன் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடை (Dario Amodei) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

AI அபிவிருத்தியை நிறுத்துவது தொடர்பில் எந்தக் கேள்வியும் இல்லை என அவர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அது தொடர்பான அபாயங்கள் பாரதூரமானவை என்பதால், அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மூன்று முக்கிய கருத்துகளைக் கொண்ட திட்டத்தையும் அவர் முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

AI மாதிரிகளை அபிவிருத்தி செய்யும் போதே சுயாதீன கண்காணிப்பை மேற்கொள்வது, ஒட்டுமொத்த AI துறைக்கும் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை முறைமையை அறிமுகப்படுத்துவது மற்றும் உலகளாவிய ரீதியில் ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஆகிய மூன்று யோசனைகளும் இதில் அடங்கும்.

இதற்கிடையில், AI தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மிகக் கடுமையான அபாயங்கள் குறித்து வெளியிடப்பட்ட சில கருத்துக்களில், எதிர்வரும் பத்தாண்டு காலத்திற்குள் AI தொழில்நுட்பத்தினால் மனிதகுலம் முற்றாக அழிவதற்கான வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes