Sports28 August 2026

இங்கிலாந்து வீரர் கார்ஸ் தொடர்பில் காவல்துறை விசாரணை !

வார இறுதியில் டெர்பி நகரில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

லோர்ட்ஸில் இன்று ஆரம்பித்துள்ள பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து கார்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, டெர்பியில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே இயல்பற்ற நிலை ஏற்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் அந்தப் பகுதியை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டதால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கிரிக்கெட் ஒழுங்குமுறை ஆணையகமும் (Cricket Regulator) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், டெர்பி நகர் மையத்தில் நடந்த தாக்குதல் முறைப்பாடுகள் குறித்து விசாரித்து வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கார்ஸ் மீது குற்றச்சாட்டு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவும் இல்லை. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை இந்த விவகாரம் குறித்து இன்னும் பொதுவில் கருத்து தெரிவிக்கவில்லை.

முன்னதாக, சனிக்கிழமை இரவில் மதுபானம் அருந்திவிட்டு பிரச்சினையில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்திருந்தது.

அணியில் மீண்டும் மீண்டும் இதுபோன்று மது தொடர்பான சம்பவங்கள் நடப்பது குறித்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அணியினர் களத்திற்கு வெளியே இதுபோன்ற முட்டாள்தனமான தவறுகளைச் செய்வது கவனத்தை திசை திருப்புவதாக அவர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes