ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் தொடர்வதனால், 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த முதலாவது ஐ.சி.சி. மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
6 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடர், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இந்தப் போட்டித் தொடரை வேறு நாட்டிற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தப் போட்டித் தொடர் நடத்தப்படும் புதிய இடம் குறித்த முடிவு, அடுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை நிர்வாகக் குழுவுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தற்போது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழுவினால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது.
இதனால், சர்வதேச கிரிக்கெட் பேரவை கூட்டங்களில் பங்கேற்க இலங்கை பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் தேர்தலை நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தி வருகின்றது.
இந்தத் தொடர் கைநழுவிப் போனதால், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் நாட்டிற்கும் கிடைக்கவிருந்த பெரும் வருமானம் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இலங்கை மகளிர் அணியின் தகுதிபெறும் வாய்ப்பிலும் சிக்கல் உருவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
6 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடர், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இந்தப் போட்டித் தொடரை வேறு நாட்டிற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தப் போட்டித் தொடர் நடத்தப்படும் புதிய இடம் குறித்த முடிவு, அடுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை நிர்வாகக் குழுவுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தற்போது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழுவினால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது.
இதனால், சர்வதேச கிரிக்கெட் பேரவை கூட்டங்களில் பங்கேற்க இலங்கை பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் தேர்தலை நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தி வருகின்றது.
இந்தத் தொடர் கைநழுவிப் போனதால், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் நாட்டிற்கும் கிடைக்கவிருந்த பெரும் வருமானம் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இலங்கை மகளிர் அணியின் தகுதிபெறும் வாய்ப்பிலும் சிக்கல் உருவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Latest News
க.பொ.த சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு:பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்!
Local
14 September 2026
குருநாகல் - மஹவ பகுதியில் தீ விபத்து: கணினி நிலையத்திற்குள் நேர்ந்த பெரும் சேதம்!
Local
14 September 2026
வெனிஸ் விழாவில் விருது பெற்ற ஆவணப்படம்: சொந்த நாட்டு இயக்குநர்கள் மீது பாயும் ‘தேசதுரோக’ குற்றம்!
Local
14 September 2026
மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Local
14 September 2026
அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு!
Local
14 September 2026
வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: பேராபத்தில் தெற்காசிய பிராந்தியம்! - ஆய்வில் தகவல்
Local
14 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்
Local
14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Local
14 September 2026
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
Local
14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
Local
14 September 2026