இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி இந்த விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இந்தப்பிரச்சினை முடிவடையப் போவதில்லை என்று நாராயண் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.
1974 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் இடம்பெற்ற போதே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் பகிர்ந்து கொண்டபோதும், இந்த பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லை என்றும் என்று நாராயண் திருப்பதி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும் ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உண்மையான பிரச்சனை, இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்களை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Latest News
மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் - எதிர்க் கட்சியை சீண்டிய ஹரிணி
Local
23 January 2026
வரலாற்றை மாற்றும் முயற்சியா?- கொதித்தெழும் நேட்டோ நாடுகள் : தொடர்ந்தும் சர்ச்சையில் ட்ரம்ப்
Local
23 January 2026
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - பயணிகளின் நிலை?
Local
23 January 2026
வானிலையில் மாற்றம்
Local
23 January 2026
200 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் பல நாள் மீன்பிடி படகு பறிமுதல்
Local
23 January 2026
சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த விசில் - இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் ரசிகர்கள்
Local
23 January 2026
மௌனம் கலைத்தார் ஹசீனா!
Local
23 January 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியமா?
Local
23 January 2026
நாடாளுமன்ற பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த அவலம் - விசாரணை அறிக்கையை மூடி மறைக்க முயற்சியா? சஜித் காட்டம்!
Local
23 January 2026
போதைப்பொருளுக்கு எதிராகத் தீவிர வேட்டை - அதிர வைக்கும் புள்ளிவிபரங்கள்
Local
23 January 2026