General30 April 2026

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை : தீர்வின்றி முடங்கிக் கிடக்கும் 6 முக்கிய சிக்கல்கள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் பல்வேறு காரணங்களால் இன்னும் இழுபறியிலேயே நீடிக்கின்றன.

இரு நாடுகளும் தங்களது நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருப்பதால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளுக்கான முக்கிய காரணங்கள் தொடர்பில் அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அணுசக்தி திட்டம்: ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், அத்தகைய கட்டுப்பாடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதிக்கிறது.

யுரேனியம் கையிருப்பு: ஈரானிடம் உள்ள 400 கிலோ கிராம் எடையுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தனது பாதுகாப்பில் எடுத்துக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. இந்த கோரிக்கையை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை: ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை, அந்த நீர்வழியில் கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளைத் தொடரப்போவதாக ஈரான் கூறுகிறது. ஆனால், ஒப்பந்தம் ஏற்படும் வரை முற்றுகை நீங்காது என அமெரிக்கா பிடிவாதம் காட்டுகிறது.

முடக்கப்பட்ட சொத்துக்கள்: நிரந்தர ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும் என்றும், முடக்கப்பட்டுள்ள 20 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும் ஈரான் அதிகாரிகள் கோருகின்றனர்.

போர் இழப்பீடு: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு சுமார் 270 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

பிராந்திய செல்வாக்கு மற்றும் ஏவுகணைகள்: லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் காசாவின் ஹமாஸ் போன்ற தனது பிராந்திய நட்பு நாடுகளுக்கு ஈரான் வழங்கும் ஆதரவைக் கட்டுப்படுத்தவும், ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அமெரிக்கா முயற்சிக்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes