General03 July 2026

இணையவழி பண மோசடி குற்றச்சாட்டு - இளைஞர் ஒருவர் கைது

இணையவழி ஊடாக பணம் சம்பாதிக்க முடியும் என கூறி 4,386,000 ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் பேருவளையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பேஸ்புக் மற்றும் டெலிகிராம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளார் என காவல் துறை தெரிவித்துள்ளது.

வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes