General19 July 2026

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 9 என்புக்கூடுகள்; மொத்தம் 446!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டம், இன்று 37ஆவது நாளாகத் தொடர்ந்தது.

இன்றைய அகழ்வு நடவடிக்கைகளின் போது மேலும் 9 மனித என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.

இதன் மூலம், செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை வெளிப்பட்ட மொத்த மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 446 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 434 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வின் போது அடையாளமிடப்பட்ட 429ஆம் இலக்க மனித என்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டாம் கட்ட அகழ்வின் போதும் இவ்வாறான நிலையில் புதைக்கப்பட்டிருந்த என்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes