International27 July 2026

அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி - குழந்தை உட்பட 5 பேர் காயம்

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலம், சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில், சிறு குழந்தை ஒருவர் உட்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய நபர் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes