General28 July 2026

கம்பீருக்கு பதிலாக வி.வி.எஸ். லக்‌ஷ்மன்? வெற்றிக்குப் பின் வெடித்த புதிய விவாதம்!

ஸிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக வி.வி.எஸ். லக்‌ஷ்மனை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, தற்போதைய தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், தற்காலிகப் பயிற்றுவிப்பாளராக லக்‌ஷ்மன் செயற்பட்டார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய லக்‌ஷ்மன், அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயரின் தலைமைத்துவத்தையும், அறிமுக வீரர்களான அசோக் சர்மா மற்றும் யாஷ் தாக்கூரின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டினார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, கௌதம் கம்பீருக்குப் பதிலாக லக்‌ஷ்மனை இந்திய அணியின் நிரந்தரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes