உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குத் தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்துப் பேசிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னிடமும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பெரும்பான்மை நீதிபதிகள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை அரச புலனாய்வுச் சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் தாக்குதல் அபாயம் குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் முப்படையினரை ஒன்றிணைத்துப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிபதி விராஜ் வீரசூரிய இவருடைய வழக்கிலும், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால் ஹேமசிறி பெர்னாண்டோவை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
ஆயினும், பெரும்பான்மை நீதிபதிகளின் உடன்பாட்டுடன் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து, கருத்துத் தெரிவிப்பதற்கு ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. “எனக்குப் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்குக் கௌரவ தலைமை நீதிபதி அவர்களுக்கு நன்றி.
நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பலவற்றுடன் நான் உடன்படவில்லை; ஆனாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. 'பாதுகாப்புச் செயலாளர்' என்று தனிப்பட்ட பதவி எதுவும் கிடையாது; இருப்பது 'பாதுகாப்பு அமைச்சுக்கான செயலாளர்' பதவியாகும்.
அப்பதவியும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளைப் போன்றதுதான். செயலாளர் ஒருவர் அமைச்சரின் பணிப்புரைகளுக்கு இணங்கவே செயற்பட வேண்டும்; அமைச்சர் இல்லாவிட்டால் செயலாளரால் எதையும் தனித்துச் செயற்படுத்த முடியாது.
பாதுகாப்பு அமைச்சு என்பது ஒரு விசித்திரமான அமைச்சு; அதிலுள்ள செயலாளர் பெரும் பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார். அந்த அமைச்சின் கீழ் சுமார் 20 நிறுவனங்கள் உள்ளன, அவற்றுக்குத் தலைவர்கள் உள்ளனர். நிலந்த ஜயவர்தன, நான் பொறுப்பேற்கும் போது அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
முக்கியமற்ற புலனாய்வுத் தகவல்களையே கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமக்குக் கொண்டுவந்து கொடுக்கிறார் என ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டிருந்தார். 'நீங்கள் புலனாய்வுத் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம், நிர்வாகச் செயற்பாடுகளைக் கவனித்துச் செல்லுங்கள்' என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என்னிடம் கூறினார்; நானும் அதையே செய்தேன்.
எனக்கு எந்தவித எழுத்துமூலமான அறிக்கையும் கிடைக்கவில்லை, வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் இரண்டும் மட்டுமே கிடைத்துள்ளன.
புலனாய்வுத் தலைவருக்கு வந்த ஆவணத்தை அவர் எனக்கு வழங்கியபோது, நாளைய கூட்டத்தில் இதனை முன்வைக்குமாறு அவரிடம் கூறினேன். அதன் பின்னர் ஏப்ரல் 9ஆம் திகதி கூட்டம் தொடங்கியது. இறுதியில் சிசிர அந்தக் கடிதத்தை எனக்குக் காட்டினார்; அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்க்குமாறு விபரங்களைக் கூறினேன், ஆனால் அது நடக்கவில்லை.
ஒரு குழுவை அனுப்பி கிழக்கு மாகாணத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்குவதாகக் கூறினார்கள்; ஆனால் செயலாளர் அவரிடம் சென்று அந்த அறிக்கையைக் கேட்பதில்லை, அந்த அறிக்கையைக் கொண்டுவந்து சேர்ப்பது அவருடைய பொறுப்பாகும். அந்த அறிக்கை இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் 16ஆம் திகதி காத்தான்குடியில் உந்துருளி குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அது குறித்து 17ஆம் திகதியே நிலந்த எனக்குத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால், ஜனாதிபதி 12ஆம் திகதி மட்டக்களப்பு விஜயத்துக்காக எழுத்துமூல அனுமதி கோரியிருந்தார், நிலந்த அதற்கு அனுமதி வழங்கினார். அவர் அவ்வாறு பயிற்சி பெற்றுச் செயற்படுகிறார் என்றால், ஒரு குடிமகனாகிய எனக்கு மட்டும் ஏன் இந்த அநீதிகள் இழைக்கப்பட வேண்டும்?
எனக்கு இறுதியாகத் தகவல்கள் கிடைத்தவை மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரையிலான காலப்பகுதிக்கு உட்பட்டவை ஆகும். அந்த அறிக்கை பற்றி வாராந்த அறிக்கையில் எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை. எனக்கு வந்த வாட்ஸ்அப் (WhatsApp) செய்தியைப் பார்த்தபோது, எதிர்வரும் நாட்களில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரிப்பதற்காக நான் உடனடியாக நிலந்தவைத் தொடர்புகொண்டேன்.
அப்போது, தகவலைத் தெரிவித்த தரப்பு நம்பகமானதாகவும் தகவலின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நிலந்த என்னிடம் தெரிவித்தார்; அவர் அதனை உறுதிப்படுத்திய பின்னர்தான் எனக்குக் கூற வேண்டும். இந்தச் செயற்பாட்டுக்கு வெறும் 12 மணித்தியாலங்களே இருந்தன. அந்தத் தாக்குதல்தாரிகள் தாக்குதலுக்கு முந்தைய நாளும் தாக்குதல் நடத்தப்பட்ட விருந்தகங்களிலேயே தங்கியிருந்தனர்.
காவல்துறையினரைக் கூப்பிடுங்கள், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று நீங்கள் கூறினீர்கள்; என்னால் அவற்றைச் செய்ய முடியாது. இந்தத் தாக்குதலைத் தடுத்துச் செயற்படுவதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஏப்ரல் 9ஆம் திகதி இருந்தது, ஆனால் நிலந்த அதனைத் தவிர்த்துவிட்டார்.
8ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை; 16ஆம் திகதியில்தான் அவர் நாடு திரும்பினார். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், நிலந்தவுக்கு அறிவுறுத்தி தேசியப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியிருக்க முடியும்; அவற்றுள் எதுவுமே செய்யப்படவில்லை.
பாதுகாப்புச் செயலாளரோ அல்லது காவல்துறை மாஅதிபரோ எவருமே தமக்கு இது பற்றி அறிவிக்கவில்லை என்றும் அவர்களுக்கு உரிய உச்ச தண்டனை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார். அதன் பின்னர் நான் பதவியிலிருந்து விலகினேன். நான் கடிதத்தை வழங்கும்போது ஜனாதிபதியிடம் பேசினேன்; 'புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று நீங்கள் எனக்குக் கூறினீர்களா இல்லையா?' என்று கேட்டேன்; அதற்கு 'இந்தத் தகவல்களை நிலந்த உங்களுக்கு அறிவிக்கவில்லையா?' என்று அவர் என்னிடம் கேட்டார்.
ஐயா, இது மிகப்பெரிய அநீதியாகும்; ஆனாலும் இப்போது பேசி எந்தப் பயனும் இல்லை. இதனைச் செய்வதற்கு எனக்கு எந்தவிதமான விருப்பமும் இருக்கவில்லை. இந்தச் சம்பவம் நடைபெற வேண்டும் என்ற தேவை இருவருக்கு இருந்தது; அவர்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் நிலந்தவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும்தான்.
எனக்கு வழங்கும் எந்தவொரு தண்டனையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். வரலாற்றில் என்றாவது ஒரு நாள் என்னை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்யும்" என்றார்.
ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பெரும்பான்மை நீதிபதிகள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை அரச புலனாய்வுச் சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் தாக்குதல் அபாயம் குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் முப்படையினரை ஒன்றிணைத்துப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிபதி விராஜ் வீரசூரிய இவருடைய வழக்கிலும், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால் ஹேமசிறி பெர்னாண்டோவை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
ஆயினும், பெரும்பான்மை நீதிபதிகளின் உடன்பாட்டுடன் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து, கருத்துத் தெரிவிப்பதற்கு ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. “எனக்குப் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்குக் கௌரவ தலைமை நீதிபதி அவர்களுக்கு நன்றி.
நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பலவற்றுடன் நான் உடன்படவில்லை; ஆனாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. 'பாதுகாப்புச் செயலாளர்' என்று தனிப்பட்ட பதவி எதுவும் கிடையாது; இருப்பது 'பாதுகாப்பு அமைச்சுக்கான செயலாளர்' பதவியாகும்.
அப்பதவியும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளைப் போன்றதுதான். செயலாளர் ஒருவர் அமைச்சரின் பணிப்புரைகளுக்கு இணங்கவே செயற்பட வேண்டும்; அமைச்சர் இல்லாவிட்டால் செயலாளரால் எதையும் தனித்துச் செயற்படுத்த முடியாது.
பாதுகாப்பு அமைச்சு என்பது ஒரு விசித்திரமான அமைச்சு; அதிலுள்ள செயலாளர் பெரும் பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார். அந்த அமைச்சின் கீழ் சுமார் 20 நிறுவனங்கள் உள்ளன, அவற்றுக்குத் தலைவர்கள் உள்ளனர். நிலந்த ஜயவர்தன, நான் பொறுப்பேற்கும் போது அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
முக்கியமற்ற புலனாய்வுத் தகவல்களையே கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமக்குக் கொண்டுவந்து கொடுக்கிறார் என ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டிருந்தார். 'நீங்கள் புலனாய்வுத் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம், நிர்வாகச் செயற்பாடுகளைக் கவனித்துச் செல்லுங்கள்' என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என்னிடம் கூறினார்; நானும் அதையே செய்தேன்.
எனக்கு எந்தவித எழுத்துமூலமான அறிக்கையும் கிடைக்கவில்லை, வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் இரண்டும் மட்டுமே கிடைத்துள்ளன.
புலனாய்வுத் தலைவருக்கு வந்த ஆவணத்தை அவர் எனக்கு வழங்கியபோது, நாளைய கூட்டத்தில் இதனை முன்வைக்குமாறு அவரிடம் கூறினேன். அதன் பின்னர் ஏப்ரல் 9ஆம் திகதி கூட்டம் தொடங்கியது. இறுதியில் சிசிர அந்தக் கடிதத்தை எனக்குக் காட்டினார்; அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்க்குமாறு விபரங்களைக் கூறினேன், ஆனால் அது நடக்கவில்லை.
ஒரு குழுவை அனுப்பி கிழக்கு மாகாணத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்குவதாகக் கூறினார்கள்; ஆனால் செயலாளர் அவரிடம் சென்று அந்த அறிக்கையைக் கேட்பதில்லை, அந்த அறிக்கையைக் கொண்டுவந்து சேர்ப்பது அவருடைய பொறுப்பாகும். அந்த அறிக்கை இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் 16ஆம் திகதி காத்தான்குடியில் உந்துருளி குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அது குறித்து 17ஆம் திகதியே நிலந்த எனக்குத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால், ஜனாதிபதி 12ஆம் திகதி மட்டக்களப்பு விஜயத்துக்காக எழுத்துமூல அனுமதி கோரியிருந்தார், நிலந்த அதற்கு அனுமதி வழங்கினார். அவர் அவ்வாறு பயிற்சி பெற்றுச் செயற்படுகிறார் என்றால், ஒரு குடிமகனாகிய எனக்கு மட்டும் ஏன் இந்த அநீதிகள் இழைக்கப்பட வேண்டும்?
எனக்கு இறுதியாகத் தகவல்கள் கிடைத்தவை மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரையிலான காலப்பகுதிக்கு உட்பட்டவை ஆகும். அந்த அறிக்கை பற்றி வாராந்த அறிக்கையில் எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை. எனக்கு வந்த வாட்ஸ்அப் (WhatsApp) செய்தியைப் பார்த்தபோது, எதிர்வரும் நாட்களில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரிப்பதற்காக நான் உடனடியாக நிலந்தவைத் தொடர்புகொண்டேன்.
அப்போது, தகவலைத் தெரிவித்த தரப்பு நம்பகமானதாகவும் தகவலின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நிலந்த என்னிடம் தெரிவித்தார்; அவர் அதனை உறுதிப்படுத்திய பின்னர்தான் எனக்குக் கூற வேண்டும். இந்தச் செயற்பாட்டுக்கு வெறும் 12 மணித்தியாலங்களே இருந்தன. அந்தத் தாக்குதல்தாரிகள் தாக்குதலுக்கு முந்தைய நாளும் தாக்குதல் நடத்தப்பட்ட விருந்தகங்களிலேயே தங்கியிருந்தனர்.
காவல்துறையினரைக் கூப்பிடுங்கள், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று நீங்கள் கூறினீர்கள்; என்னால் அவற்றைச் செய்ய முடியாது. இந்தத் தாக்குதலைத் தடுத்துச் செயற்படுவதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஏப்ரல் 9ஆம் திகதி இருந்தது, ஆனால் நிலந்த அதனைத் தவிர்த்துவிட்டார்.
8ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை; 16ஆம் திகதியில்தான் அவர் நாடு திரும்பினார். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், நிலந்தவுக்கு அறிவுறுத்தி தேசியப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியிருக்க முடியும்; அவற்றுள் எதுவுமே செய்யப்படவில்லை.
பாதுகாப்புச் செயலாளரோ அல்லது காவல்துறை மாஅதிபரோ எவருமே தமக்கு இது பற்றி அறிவிக்கவில்லை என்றும் அவர்களுக்கு உரிய உச்ச தண்டனை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார். அதன் பின்னர் நான் பதவியிலிருந்து விலகினேன். நான் கடிதத்தை வழங்கும்போது ஜனாதிபதியிடம் பேசினேன்; 'புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று நீங்கள் எனக்குக் கூறினீர்களா இல்லையா?' என்று கேட்டேன்; அதற்கு 'இந்தத் தகவல்களை நிலந்த உங்களுக்கு அறிவிக்கவில்லையா?' என்று அவர் என்னிடம் கேட்டார்.
ஐயா, இது மிகப்பெரிய அநீதியாகும்; ஆனாலும் இப்போது பேசி எந்தப் பயனும் இல்லை. இதனைச் செய்வதற்கு எனக்கு எந்தவிதமான விருப்பமும் இருக்கவில்லை. இந்தச் சம்பவம் நடைபெற வேண்டும் என்ற தேவை இருவருக்கு இருந்தது; அவர்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் நிலந்தவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும்தான்.
எனக்கு வழங்கும் எந்தவொரு தண்டனையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். வரலாற்றில் என்றாவது ஒரு நாள் என்னை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்யும்" என்றார்.
Latest News
ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி, 21 பேர் காயம்
Local
02 August 2026
பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு : யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம்!
Local
02 August 2026
விதிகளை மீறி செயற்படும் 129 மதுபானசாலைகள் - தமிழக அரசுக்கு அண்ணாமலை அதிரடி கடிதம்!
Local
02 August 2026
தங்கத்தின் விலையில் மாற்றம்
Local
02 August 2026
பிரபுதேவாவின் பரதநாட்டியம் குறித்துக் கிளம்பிய சர்ச்சை!
Local
02 August 2026
தோல்வியடைந்ததா சமூக ஊடகத் தடை? தடையை மீறும் சிறுவர்கள்
Local
02 August 2026
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
Local
02 August 2026
வரலாற்றில் மிக மோசமான எபோலா பரவல் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர அறிவிப்பு!
Local
02 August 2026
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை - வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
02 August 2026
மகன் சஞ்சய்க்கு விஜய் கொடுத்த அந்த ஒரு அறிவுரை!
Local
02 August 2026