பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெராவை முன்னிட்டு, கடுவெல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேவாலயத்தின் பெரஹெரா இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை நடைபெறவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பெரஹரா தேவாலயத்திற்கு அருகில் ஆரம்பமாகி, 143 அவிசாவளை – கொழும்பு பேருந்து வீதி வழியாக கடுவெல ராஜசிங்க பாலத்தைக் கடந்து, பண்டாரவத்தை மற்றும் பியகம பகுதிகளைச் சென்றடையவுள்ளது.
தீர்த்த உற்சவ சடங்குகள் நிறைவடைந்த பின்னர், அதே வீதி வழியாக, பெரஹரா மீண்டும் கடுவெல சந்தியை கடந்து தேவாலயத்தை வந்தடையவுள்ளது.
இதன் காரணமாக பெரஹரா செல்லும் காலப்பகுதியில் குறித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Latest News
அத்துருகிரியவில் துப்பாக்கிச்சூடு: உணவக உரிமையாளர் படுகாயம்!
Local
17 August 2026
பல்லேகலை சிறைச்சாலையில் பரபரப்பு: ஆசனவாயில் 'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த கைதி சிக்கினார்!
Local
17 August 2026
கின்னஸ் சான்றளித்த உலகின் மிக உயரமான 10 பெண்களின் பட்டியல் வெளியீடு!
Local
17 August 2026
முப்படை ஆராய்ச்சி அமைப்புகளையும் இணைத்து ஒரே தேசிய மையம்: ஜனாதிபதி யோசனை!
Local
17 August 2026
விரைவில் இலங்கை மக்கள் விருப்பமான வாகனங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்: விஜித ஹேரத் உறுதி!
Local
17 August 2026
ஆண்டின் இறுதிக்குள் 'எல் நினோ' தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
17 August 2026
1 பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்
Local
17 August 2026
கடந்த 16 நாட்களில் 6,900க்கும் அதிகமானோருக்கு டெங்கு: கம்பஹாவில் உச்சகட்ட அச்சுறுத்தல்!
Local
17 August 2026
உட்பூசல்களாலேயே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததாக குற்றச்சாட்டு!
Local
17 August 2026
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!
Local
17 August 2026