இலங்கையில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு ஈழத் தமிழர்களின் தாயகம், தேசியம் மற்றும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு கையளிக்கப்பட்ட 15 அம்ச பிரகடனத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதியின் ஓலம் - 02, போராட்டத்தின் நிறைவாக நேற்று மாலை ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாண கிளை அலுவலகத்தில் குறித்த பிரகடனம் கையளிக்கப்பட்டது.
அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்றும் “நீதியின் ஓலம்” பிரகடனம் மூலம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கையெழுத்துப் போராட்டத்தின் ஊடாக, ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் மீண்டும் சர்வதேச கவனத்திற்கு கொண்டுவரப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விஹாரைகளுக்குள்ளும் கடந்தகாலங்களில் தமிழர்களுக்கு எதிரான அநீதி இழைக்கப்பட்டிருக்கலாம் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
எனவே, தமிழர்களுக்கு எதிரான அநீதி இழைக்கப்பட்டமைக்கு காரணமான குற்றவாளிகளை பாதுகாக்கும் அரணாக வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவமுகாம்களையும், விகாரைகளையும் பயன்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதியின் ஓலம் - போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Latest News
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு
Local
19 August 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று
Local
19 August 2026
"AI அம்மா!" - AI குழந்தை, AI காதலனுடன் வாழ்வதாகக் கூறி அதிர்ச்சி அளித்த பெண்
Local
19 August 2026
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்
Local
19 August 2026
திராவிட முன்னேற்ற கழகத்தின் "செயல் தலைவர்" பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க திட்டம்
Local
19 August 2026
கிளிநொச்சியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல்களைப் பரப்பியவர் கைது
Local
19 August 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
Local
19 August 2026
செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு
Local
19 August 2026
வாடகை வாகனப் பயணிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்
Local
19 August 2026
"ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்" - நடிகை தமன்னா ஆதங்கம்!
Local
19 August 2026