விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (21) மாலை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு, காலில் ஏற்பட்ட 'வெரிகோஸ்' (Varicose veins) நரம்புப் பாதிப்பு காரணமாக நரம்பொன்று வெடித்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சேவைப் பெறுநரின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறு கோரி சுகீஸ்வர பண்டாரவின் சட்டத்தரணிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இருப்பினும், அந்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் உள்விவகாரம் அல்லது சுகாதார வசதிகள் தொடர்பாக நேரடி உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இது தொடர்பான கோரிக்கையை நேரடியாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் முன்வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தில் விசேட திட்டங்களின் பணிப்பாளர் நாயகமாகவும் இவர் பணியாற்றினார்.
22 கோடி ரூபாவுக்கும் அதிகமான அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் நம்பிக்கை துரோகம் இழைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு, காலில் ஏற்பட்ட 'வெரிகோஸ்' (Varicose veins) நரம்புப் பாதிப்பு காரணமாக நரம்பொன்று வெடித்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சேவைப் பெறுநரின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறு கோரி சுகீஸ்வர பண்டாரவின் சட்டத்தரணிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இருப்பினும், அந்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் உள்விவகாரம் அல்லது சுகாதார வசதிகள் தொடர்பாக நேரடி உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இது தொடர்பான கோரிக்கையை நேரடியாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் முன்வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தில் விசேட திட்டங்களின் பணிப்பாளர் நாயகமாகவும் இவர் பணியாற்றினார்.
22 கோடி ரூபாவுக்கும் அதிகமான அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் நம்பிக்கை துரோகம் இழைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Latest News
அமெரிக்காவிற்கு கனடா அதிரடி பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி அமுல்!
Local
23 August 2026
உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!
Local
23 August 2026
ஊதா நிற மின்னல்: விண்வெளியில் இருந்து நாசா வீரர் எடுத்த அபூர்வ புகைப்படம்!
Local
23 August 2026
பேருந்தை விற்றுப் பணம் கொடுத்த உரிமையாளர்: போலி விமானி சிக்கியது எப்படி?
Local
23 August 2026
டோக்கியோவில் குலுங்கிய உயரமான கட்டிடங்கள்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!
Local
23 August 2026
BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! 'நமஸ்தே இந்தியா' என வைரலாகும் விளம்பர காணொளி!
Local
23 August 2026
தொடருந்து நிலைய அதிகாரியான பூனை! மும்பை மெட்ரோவின் வைரல் 'தலைமைப் பூனை அதிகாரி'!
Local
23 August 2026
"நயன்தாரா படம் பார்க்க அடித்துப் பிடித்து நுழைவுச்சீட்டு வாங்கிய கவின்: வைரலாகும் சுவாரஸ்ய தகவல்!"
Local
23 August 2026
வாடகை வீடு தேடச் சென்று AI நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெற்ற இளம்பெண்: சுவாரஸ்ய சம்பவம்!"
Local
23 August 2026
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் மீன் வளர்ப்பு திட்டம்: மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும் வாய்ப்பு
Local
23 August 2026