விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (21) மாலை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு, காலில் ஏற்பட்ட 'வெரிகோஸ்' (Varicose veins) நரம்புப் பாதிப்பு காரணமாக நரம்பொன்று வெடித்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சேவைப் பெறுநரின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறு கோரி சுகீஸ்வர பண்டாரவின் சட்டத்தரணிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இருப்பினும், அந்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் உள்விவகாரம் அல்லது சுகாதார வசதிகள் தொடர்பாக நேரடி உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இது தொடர்பான கோரிக்கையை நேரடியாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் முன்வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தில் விசேட திட்டங்களின் பணிப்பாளர் நாயகமாகவும் இவர் பணியாற்றினார்.
22 கோடி ரூபாவுக்கும் அதிகமான அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் நம்பிக்கை துரோகம் இழைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு, காலில் ஏற்பட்ட 'வெரிகோஸ்' (Varicose veins) நரம்புப் பாதிப்பு காரணமாக நரம்பொன்று வெடித்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சேவைப் பெறுநரின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறு கோரி சுகீஸ்வர பண்டாரவின் சட்டத்தரணிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இருப்பினும், அந்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் உள்விவகாரம் அல்லது சுகாதார வசதிகள் தொடர்பாக நேரடி உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இது தொடர்பான கோரிக்கையை நேரடியாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் முன்வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தில் விசேட திட்டங்களின் பணிப்பாளர் நாயகமாகவும் இவர் பணியாற்றினார்.
22 கோடி ரூபாவுக்கும் அதிகமான அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் நம்பிக்கை துரோகம் இழைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Latest News
தமிழக மக்களின் அரசியல் முடிவு சரியானது - முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் யாஷ் புகழாரம்!
Local
25 August 2026
அம்பலாங்கொடவில் அதிரவைக்கும் சம்பவம்: விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான நிலையில் உடலமாக மீட்பு!
Local
25 August 2026
எல் நினோ தீவிரமடைந்தால் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
25 August 2026
திடீரென உருவான சூப்பர்செல் சூறாவளி: பிரான்ஸில் நிலவும் பதற்றமான சூழல்!
Local
25 August 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயது 40 ஆக அதிகரிக்கப்படுமா? – அரசாங்கம் தெளிவுபடுத்தல்!
Local
25 August 2026
கொழும்பில் இந்தியா - இலங்கை டெஸ்ட்: 3வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தடுமாற்றம்!
Local
25 August 2026
விஜய் தீவிர அரசியலுக்கு வந்த பின் இது நடக்கலையே... : விஜய் – சங்கீதா திருமண நாளில் மீண்டும் கவனம்!
Local
25 August 2026
மத்திய கிழக்கு நிலைமை ஸ்திரமடையும் வரை QR எரிபொருள் விநியோக முறைமை தொடரும்!
Local
25 August 2026
கோடிகளில் புரண்டாலும் வெளிநாட்டில் காசாளராக வேலை பார்த்த ஜேசன் சஞ்சய் : வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம்!
Local
25 August 2026
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீவிரம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
25 August 2026