General31 August 2026

பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்

கம்பஹா, பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற நால்வர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களில் 35 வயதுப் பெண்ணொருவரும், அவரது 4 வயது மகளும், 13 வயதுச் சிறுவனொருவனும், 12 வயதுச் சிறுமியோருவரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் ஜா-எலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களைத் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes