General14 September 2026

தெஹிவளை கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் கைது

தெஹிவளை - சிறிசங்கபோ வீதியில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி, கடந்த 11 ஆம் திகதி பாதுக்க, பஹள போபே பகுதியில் கைவிடப்பட்டுக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய காவல்துறையினர் தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes