கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேனர் (CT Scanner) பரிசோதனைக் கருவியைக் கொள்முதல் செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 'சிரிலிய சவிய' அமைப்பின் கணக்கிற்கு ரூ. 10 மில்லியன் நிதி மாற்றப்பட்டமை தொடர்பில், ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
ஷிரந்தி ராஜபக்ஷ தலைவராகச் செயற்பட்ட 'சிரிலிய சவிய' அமைப்பின் மருதானை மற்றும் சுதுவெல்ல கிளைக் கணக்குகளுக்கு, எழுத்துப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இந்த நிதி மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனினும், குறித்த சி.டி. ஸ்கேனர் கருவி சீன அரசாங்கத்தினால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை பின்னரே தெரியவந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச வங்கியிலிருந்து பெறப்பட்ட ரூ. 10 மில்லியன் நிதி, குறித்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாமல் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அந்த நிதியின் தற்போதைய நிலை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய சேமிப்பு வங்கியின் அதிகாரிகள் மற்றும் குறித்த காலத்தில் பணியாற்றிய பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, இந்த முறைகேடு தொடர்பில் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஷிரந்தி ராஜபக்ஷ தலைவராகச் செயற்பட்ட 'சிரிலிய சவிய' அமைப்பின் மருதானை மற்றும் சுதுவெல்ல கிளைக் கணக்குகளுக்கு, எழுத்துப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இந்த நிதி மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனினும், குறித்த சி.டி. ஸ்கேனர் கருவி சீன அரசாங்கத்தினால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை பின்னரே தெரியவந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச வங்கியிலிருந்து பெறப்பட்ட ரூ. 10 மில்லியன் நிதி, குறித்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாமல் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அந்த நிதியின் தற்போதைய நிலை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய சேமிப்பு வங்கியின் அதிகாரிகள் மற்றும் குறித்த காலத்தில் பணியாற்றிய பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, இந்த முறைகேடு தொடர்பில் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
காவல்துறை தகவலாளரின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது
Local
15 September 2026
போக்குவரத்து சமிக்ஞையை மீறி ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி மீது சட்ட நடவடிக்கை
Local
15 September 2026
IMAX வசூலில் வரலாறு படைத்த ‘The Odyssey’ திரைப்படம்!
Local
15 September 2026
முன்விரோதத்தால் வந்த வினை - கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழப்பு
Local
15 September 2026
பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் தங்கம், வெள்ளி படிவங்கள் கண்டுபிடிப்பு!
Local
15 September 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
15 September 2026
அநுராதபுர பேரணியில் புலிப் பிரசார குற்றச்சாட்டு: பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் விசாரணை ஒப்படைப்பு!
Local
15 September 2026
செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1 வரை ‘தேசிய சிறுவர் தின வாரம்’: அமைச்சரவை அனுமதி
Local
15 September 2026
பொருளாதார நெருக்கடியால் வெடித்த ஆத்திரம்: கடலை நோக்கிச் சத்தமிட்ட விசித்திரக் கூட்டம்!
Local
15 September 2026
2027ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
Local
15 September 2026