கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

Tuesday, 11 August 2026 - 0:20

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%21
கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் பல குடியிருப்பாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதுடன், தலைநகர் போகோட்டாவில் உள்ள மக்களும் பாதுகாப்பு கருதி அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலநடுக்கம், தலைநகர் போகோட்டாவிற்கு மேற்கே சுமார் 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சொகோ பிராந்தியத்தின் சென் ஜோஸ் டெல் பால்மர் பகுதியில், 107 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதன் தாக்கம் அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் உணரப்பட்ட போதிலும், அங்கு குறைந்த அளவிலான பாதிப்புகளே பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த பெரெய்ரா, மேனிசேல்ஸ், குவிப்டோ, ஆர்மீனியா, கார்டாகோ மற்றும் புவெனவென்ச்சுரா ஆகிய 6 வானூர்தி நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் வானூர்தி; போக்குவரத்து முகவரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலநடுக்கப் பாதிப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், கொலம்பிய அரசாங்கத்திற்கும் கொலம்பியா மக்களுக்கும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.