General06 June 2026

லெபனானில் உள்ள ‘ரஹ்மா’ என்ற பெண்ணின் உறவினர்களைக் கண்டறிய வெளியுறவு அமைச்சு பொதுமக்களிடம் உதவி கோரிக்கை!

லெபனானில் வசித்து வரும், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என நம்பப்படும் பெண் ஒருவரை அடையாளம் காண்பதற்கும், அவரது குடும்பத்தினரைக் கண்டறிவதற்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.

அமைச்சின் தகவல்களின்படி, அந்தப் பெண் லெபனானில் “ரஹ்மா” (Rahma) என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

எனினும், அவருடைய உண்மையான அடையாளம், குடும்ப விபரங்கள் அல்லது அவர் இலங்கையில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போன்ற எந்தவொரு உத்தியோகபூர்வ விபரங்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே, இந்தப் பெண்ணை அடையாளம் காணக்கூடிய அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள், தெரிந்த தொடர்புகள் பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் யாரேனும் இருந்தால், உடனடியாக முன்வந்து தகவல் வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான தொடர்பு விபரங்கள்:

தகவல்களைப் பத்தரமுல்லை , ‘சுஹுருபாய’ (Suhurupaya) கட்டடத்தின் 16வது மாடியில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கன்சியூலர் விவகாரப் பிரிவிடம் (Consular Affairs Division) சமர்ப்பிக்க முடியும்.

தொலைபேசி எண்: +94 11 227 5525

மின்னஞ்சல்: [email protected]

பொதுமக்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் மிகவும் இரகசியமாகப் பேணப்படும் என அமைச்சின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes