நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமின்றி, அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகக்கூடும் என வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திம பாலமகும்புர தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நக்கிள்ஸ் காட்டின் ஹுன்னஸ்கிரிய பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவியிருந்த தீ, தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளைப் பாதித்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றம் தற்போது இலங்கையின் வானிலையிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய முன்னறிவிப்புகளின்படி, தற்போது பலவீனமாக உள்ள இந்த 'எல் நினோ' நிலைமையானது, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 80 சதவீதத்திற்கு மேல் தீவிரமடையக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Latest News
ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு சலுகை மறுப்பு - இந்திய அரசிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்
Local
15 July 2026
உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் விடுமுறை தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு
Local
15 July 2026
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட போது சம்பவம்
Local
15 July 2026
அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ: எச்சரிக்கை
Local
15 July 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்
Local
15 July 2026
'AK64' படத்தை அஜித் தானே தயாரிக்கின்றாரா? – ஷாலினி அஜித் குறித்த புதிய தகவல்!
Local
15 July 2026
வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்
Local
15 July 2026
WhatsApp-இல் மீண்டும் ChatGPT சேவை? : வெளியாகியுள்ள தகவலின் உண்மை நிலை என்ன?
Local
15 July 2026
சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பொறுப்பு?
Local
15 July 2026
இலங்கையில் 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்கள்' இன்று அறிமுகம்: சுகாதார மற்றும் ஊடக அமைச்சு ஏற்பாடு
Local
15 July 2026