Entertainment23 July 2026

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை திரையரங்கில் கண்டு ரசித்த நடிகை த்ரிஷா!

சென்னை கோயம்பேடு ரோஹிணி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த த்ரிஷாவின் நிழற்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன

திரைத்துறையிலிருந்து விலகி தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று ( 23) உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

காலை முதலே திரையரங்குகளில் பட்டாசு வெடித்து, ஆடல் பாடலுடன் திருவிழா போல ரசிகர்கள் படத்தை வரவேற்றுப் பார்த்து ரசித்து வருகின்றனர்.

திரையுலகப் பிரபலங்கள் பலரும் ரசிகர்களோடு இணைந்து இந்தத் திரைப்படத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் வெவ்வேறு திரையரங்குகளில் படத்தை பார்த்து வரும் நிலையில், நடிகை த்ரிஷா சென்னை கோயம்பேட்டில் உள்ள புகழ்பெற்ற ரோஹிணி திரையரங்கிற்கு சென்றுள்ளார் .

த்ரிஷா திரையரங்கிற்குள் நுழைந்தபோது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி, ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes