General26 July 2026

ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல் நிறுத்தம்: ட்ரம்ப் அதிரடி முடிவு!

ஈரானிய இலக்குகள் மீது 14ஆவது இரவாக நடத்தப்படவிருந்த வான்வழித் தாக்குதல்களுக்கான திட்டம் அமெரிக்க ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அவர் அதற்கு உத்தரவிடவில்லை என Axios செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலாக, புதுப்பிக்கப்பட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்க அமெரிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல்களின் பயனுள்ள தன்மை அதன் உச்சத்தை எட்டிவிட்டதாகவும், மேலும் பல ஈரானிய வசதிகளை இலக்கு வைப்பதன் மூலம் புதிதாக எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்றும் இராணுவத் தலைவர்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாகவே 14ஆவது இரவில் நடத்தப்படவிருந்த வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து ஈரானின் கருத்து இதுவரை வெளியாகவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes