International29 July 2026

யுக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல்: சேதமடைந்த வீடுகளை விரைந்து சீரமைக்கும் தொண்டர்கள்!

யுக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய கடுமையான ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களை, 'டோப்ரோபட்' (Dobrobat) தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தொண்டர்கள் உடனடியாக மீட்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

2026, ஜூன் 15 ஆம் திகதி அதிகாலை யுக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பல மணி நேரத் தாக்குதலின் போது சுமார் 70 ஏவுகணைகள் வீசப்பட்டன.

இதில் கிழக்கு கீவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு அருகில் ஏவுகணைத் துகள்கள் விழுந்து வெடித்தன.

இந்தச் சக்திவாய்ந்த அதிர்வலையால் அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஜன்னல் கண்ணாடிகள் சிதறித் தகர்ந்தன.

இந்தத் தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, யுக்ரைனின் மிகப்பெரிய தொண்டர் அமைப்பான 'டோப்ரோபட்' (Battalion of Kindness) களத்தில் இறங்கியது.

நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அங்கு குவிந்து, கட்டிட இடிபாடுகளை அகற்றிவிட்டு, தற்காலிகமாக மரப் பலகைகளைக் கொண்டு ஜன்னல்களை மூடும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த 'டோப்ரோபட்' அமைப்பில் 55,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளனர்.

யுக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இதில் இணைந்து சேவையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், யுக்ரைன் அரசுத் தரப்பு உதவிகள் தாமதமாகக் கிடைக்கும் சூழலில், தொண்டர்களின் துரிதமான நடவடிக்கைகள் போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குப் பெரும் ஆறுதல் அளிப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes